இமாசலப் பிரதேசம் : ஜெயிக்கப்போவது யாரு?

இமாசலப் பிரதேசம் : ஜெயிக்கப்போவது யாரு?
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

றுபத்தெட்டு இடங்கள் கொண்ட இமாசலப் பிரதேச சட்டமன்றத்துக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. கடந்த முறை  43 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., இந்த முறையும் மெஜாரிடி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி  எழுந்துள்ளது.

ஆனால், பா.ஜ.க. தரப்பு உற்சாகமாகவே உள்ளது. காரணம்,  பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின்  சொந்த மாநிலம் இது. எனவே,  இந்தத் தேர்தல் அவருக்கு ஒரு தன்மானப் பிரச்னை.  

ஜே.பி.நட்டா பல கிராமங்களுக்கும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷா பெரும்பாலான பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார்.  

பிரதமர் மோடியும் ஒரு சில பேரணிகளில் பங்கேற்றதுடன், சில தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த போட்டி வேட்பாளர்களுக்கு டெலிபோன் செய்து, வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி சொன்னார்.

உள்ளூர் தலைவர்கள் கடுமையாக தேர்தல் வேலை பார்த்துக் கொண்டார்கள். இப்படி பா.ஜ.க. தரப்பில் தலை முதல் வால் வரை அனைவரும் உற்சாகமாக உழைக்க, காங்கிரஸ் தரப்பில் இதற்கு நேர் எதிர்.

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இமாசலப் பிரதேசத்தின் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை.  தேர்தலுக்கு முன்பாக பிரியங்கா மாநிலத்தில் முகாமிட்டு, பிரசாரம் செய்தாலும், “மாநிலத்தில் 68 தொகுதிகளுக்கும் செல்ல முடியாது” என்று சொல்லிவிட்டார்.

அவருக்கு வசதியாக இழுபறியான தொகுதிகள் என்று ஒரு பட்டியல் போட்டு அவரிடம் கொடுத்தார்கள். அதில் 40 தொகுதிகள்  இருந்தன. ஆனால்,  பிரியங்கா  பத்துப் பன்னிரெண்டு மாவட்டங்களில் பேரணிகளுக்கு வர ஒப்புக்கொண்டார்.

 கடைசியில் அதுவும் இல்லாமல்,  நான்கு பாராளுமன்றத் தொகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் மட்டுமே கலந்துகொண்டு பேசினார்.

மொத்தத்தில் இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்களும் சரி, தொண்டர்களும் சரி நொந்து போய்விட்டார்கள். “பா.ஜ.க.வில் தலைவர்கள், கட்சிக்காக பணியாற்றுகிறார்கள்; காங்கிரசிலோ, கட்சிக்காரர்கள் தலைவர்களுக்காக பணியாற்ற வேண்டியுள்ளது; அப்படியும் கூட தலைவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை” என்று வெறுத்துப் போய் பேசுகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com