மத்திய அரசு வழங்கும் ரூ.1.30 லட்சம்.. வீடு கட்ட விண்ணப்பிப்பது எப்படி? இதை மிஸ் பண்ணாதீங்க!

New scheme
New scheme
Published on

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் (PMAY-G) என்பது, கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்கள் மற்றும் சேதமடைந்த அல்லது மண் வீடுகளில் வசிப்பவர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தர வீடுகளைக் கட்டித் தரும் நோக்குடன் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு மகத்தான திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவி, அவர்கள் வசிக்கும் பகுதியைப் பொறுத்து மாறுபடுகிறது.

  • சமவெளிப் பகுதிகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு ஒரு வீட்டைக் கட்ட ரூ.1.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

  • மலைப்பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற கடினமான மற்றும் சிறப்புப் பகுதிகளுக்கு, போக்குவரத்துச் செலவுகள் மற்றும் கட்டுமானச் சவால்களைக் கருத்தில் கொண்டு, ஒரு வீட்டிற்கு ரூ.1.30 லட்சம் வழங்கப்படுகிறது. இது சமவெளிப் பகுதிகளை விட ரூ.10,000 அதிகமாகும்.

வீடு கட்டும் நிதி உதவியைத் தவிர, மேலும் சில நன்மைகளையும் பெறுகிறார்கள்:

  • சுத்த பாரத் மிஷன் - கிராமின் (SBM-G) திட்டத்தின் கீழ், கழிவறை கட்ட ரூ.12,000 வரை கூடுதல் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) உடன் இத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளதால், பயனாளிகள் தங்கள் வீட்டை கட்ட 90 முதல் 95 நாட்களுக்கான கூலித்தொகையையும் பெற முடியும்.

  • தேவைப்பட்டால், பயனாளிகள் ரூ.70,000 வரை குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடனும் பெறலாம்.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான வீட்டை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும். இந்த வீடுகள் குறைந்தது 25 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும், சமையலறையுடன் கட்டப்பட வேண்டும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • வீடு இல்லாத குடும்பங்கள்.

  • பழுதடைந்த அல்லது மண் வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள்.

  • பட்டியலிடப்பட்ட சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பிற சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள்.

இதையும் படியுங்கள்:
சருமப் பராமரிப்பு: உங்கள் சரும வகையைக் கண்டறிந்து பாதுகாக்க சில எளிய வழிகள்!
New scheme

இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும் கிராமப்புற குடும்பங்கள், சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு (SECC) 2011-ன் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இந்தத் தரவுகள், வீடு இல்லாத அல்லது மோசமான நிலையில் வசிக்கும் குடும்பங்களை அடையாளம் காண உதவுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?

PMAY-G திட்டத்திற்கு நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கிடையாது. இந்தத் திட்டம் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு (SECC) 2011-ன் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த தரவுகளின்படி, தகுதியுள்ள குடும்பங்கள் கிராம சபை மூலம் சரிபார்க்கப்பட்டு, பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

1. உங்கள் கிராம சபை (Gram Sabha) மூலம், நீங்கள் தகுதியுள்ள பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

2. கிராம சபை உங்கள் பெயரை சரிபார்த்து, தகுதியுடையவர் என்று அங்கீகரித்தால், உங்கள் பெயர் பட்டியலில் சேர்க்கப்படும்.

3. தேவையான ஆவணங்களை உங்கள் உள்ளூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

  • ஆதார் அட்டை

  • வங்கிக் கணக்குப் புத்தகம்

  • பான் கார்டு

  • முகவரிச் சான்று

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

    ஆகியவை விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்.

இதையும் படியுங்கள்:
வியட்நாமின் பிரமிக்க வைக்கும் சுண்ணாம்பு பாறைக் குகைகள்!
New scheme

2024 ஆகஸ்ட் நிலவரப்படி, 2.94 கோடி வீடுகள் அங்கீகரிக்கப்பட்டு, 2.64 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், மத்திய அமைச்சரவை மேலும் இரண்டு கோடி வீடுகளுக்கான நிதி உதவியை அங்கீகரித்துள்ளது. FY 2024-2029 காலப்பகுதியை இலக்காகக் கொண்டு, மாத வருமானம் ரூ.15,000 வரை உள்ளவர்கள் (முந்தைய வரம்பு ரூ.10,000) மற்றும் இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தகுதி விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டம், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை உறுதிசெய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com