இங்கிலாந்தின் பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியர்!

இங்கிலாந்தின் பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியர்!
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

அண்மையில் பிரிட்டனின் பில்லியனர்களின் பட்டியல் வெளியானது. அந்தப் பட்டியலில் மொத்தம் 171 பில்லியனர்கள் இருக்கிறார்கள். அதில் இடம் பெற்றுள்ள மிகவும் செழிப்பான பில்லியனர்கள் வரிசையில் முதல் இடம் பெற்றிருப்பது ஒரு இந்தியக் குடும்பம் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். அது ஹிந்துஜா குடும்பம்தான்! அவர்களின் சொத்து மதிப்பு மூன்று லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். கடந்த ஆண்டின் பட்டியலிலும் இவர்களே முதலிடத்தில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது பிரிட்டிஷ் பிரதமர் பதவியில் இருப்பவர் ரிஷ் சுனக். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததே. முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனர்களான நாராயண மூர்த்தி-சுதா நாராயண மூர்த்தி ஆகியோரின் மாப்பிள்ளை என்பது கூடுதல் தகவல்.

ரிஷி சுனக்கின் மனைவியும், நாராயண மூர்த்தி தம்பதியரின் மகளுமான அக்ஷதா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் வைத்திருக்கிறார். இவர் வசம் இருந்த பங்குகளின் சந்தை மதிப்பு கடந்த ஆண்டின் துவக்கத்தில் சுமார் 7500 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் பங்குச் சந்தையில் காணப்பட்ட ஏற்ற இறக்கங்களின் காரணமாக அக்ஷதா மூர்த்தி வைத்திருந்த இன்ஃபோசிஸ் பங்குகளில் மதிப்பு மட மடவென்று சரிந்தது.

கடந்த ஆண்டின் இறுதி நிலவரப்படி, அந்தப் பங்குகளின் மதிப்பு ஐந்தில் ஒரு பங்கு அளவுக்கு இறங்கிவிட்டது. அதாவது, அவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் அளவுக்கு இறக்கம் கண்டது. இதன்காரணமாக பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனோக் மற்றும் அவருடைய மனைவியின் சொத்து மதிப்பு ரூபாய் 5500 கோடி அளவுக்குக் குறைந்துவிட்டது.

இந்த மதிப்பு இறக்கம், பிரிட்டனில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி, பிரிட்டிஷ் மீடியாவில் பேசு பொருள் ஆகியுள்ளது.

அந்தப் கொழுத்த பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளவர் ரசாயனத் தொழில்துறை சூறாவளி என அழைக்கப்படும் சர் ஜிம் ரட்கிளிஃப். இவர், நம் ஊர் செல்வந்தர்கள் ஐ.பி.எல்.அணிகளை வாங்குவதைப் போல, இங்கிலாந்தின் மிகப்பிரபலமான மான்செஸ்டர் யுனைட்டட் அணியை வாங்குவது இவரது லட்சியமாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com