"Gen Z" போராட்டத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்… நேபாளத்தில் இருந்து இந்திய அரசுக்கு வந்த அழைப்பு..!

Nepal violent
Nepal violent
Published on

நேபாளத்தில் நடந்து வரும் "Gen Z" போராட்டங்களுக்கு மத்தியில், இந்தியப் பெண் ஒருவர் இந்திய அரசிடம் உதவி கோரும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உபாசனா கில் என்ற பெண், நேபாளத்தில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் மற்றும் தான் தங்கியிருந்த விடுதிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தது பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து, மாணவர்களால் நடத்தப்படும் மிகப்பெரிய "Gen Z" போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டம் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசின் மீது அதிகரித்து வரும் ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதிபலிக்கும் ஒரு பெரிய இயக்கமாக விரிவடைந்தது.

போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், சமூக ஊடகங்களுக்கான தடை திங்கட்கிழமை இரவு நீக்கப்பட்ட பின்னரும் கூட, செவ்வாய்க்கிழமை பிரதமர் ஒலி பதவி விலகினார். போராட்டக்காரர்கள் பல அரசு கட்டிடங்களைத் தாக்கி, நாடாளுமன்றம் மற்றும் பல முக்கியத் தலைவர்களின் வீடுகளுக்குத் தீ வைத்தனர்.

அந்த காணொளியில், தான் ஒரு கைப்பந்துப் போட்டியை தொகுத்து வழங்குவதற்காக நேபாளம் வந்ததாகவும், தான் தங்கியிருந்த விடுதியில் ஸ்பாவில் இருந்தபோது, கையில் தடிகளுடன் வந்த ஒரு கும்பல் தன்னை துரத்தியதாகவும், அதனால் தான் தப்பித்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் உபாசனா கில் கூறினார்.

இதையும் படியுங்கள்:
Atomic Habits: இந்த ஒரு புத்தகத்தைப் படியுங்கள், உங்கள் கெட்ட பழக்கங்கள் எல்லாம் ஓடிவிடும்!
Nepal violent

"என் பெயர் உபாசனா கில். இந்தக் காணொளியை பிரஃபுல் கார்க்கிற்கு அனுப்புகிறேன். இந்தியத் தூதரகம் எங்களுக்கு உதவ வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். எங்களால் இங்கு இருக்க முடியவில்லை. நேபாளத்தின் போக்காராவில் நான் சிக்கித் தவிக்கிறேன். நான் இங்கு ஒரு கைப்பந்துப் போட்டியை தொகுத்து வழங்க வந்தேன், இப்போது நான் தங்கியிருந்த விடுதி எரிக்கப்பட்டுவிட்டது.

என்னுடைய உடமைகள், பொருட்கள் அனைத்தும் என் அறையில் இருந்தன, விடுதி முழுவதும் தீக்கிரையானது. நான் ஸ்பாவில் இருந்தபோது, கையில் பெரிய தடிகளுடன் மக்கள் என்னைத் துரத்தினார்கள், நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பெரும் சிரமப்பட்டேன்," என்று அவர் காணொளியில் தெரிவித்தார்.

உபாசனா கில் மேலும் கூறுகையில், "இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சாலைகள் எங்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சுற்றுலாப் பயணிகளைக்கூட விட்டுவைக்கவில்லை. அவர்கள் யோசிக்காமல் எல்லா இடங்களிலும் தீ வைத்து வருகின்றனர், நிலைமை மிகவும், மிகவும் மோசமாகிவிட்டது," என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
பல நிறங்களில் கண்கள்; தப்பிப்பதில் கில்லாடிகள்... யார் இவர்கள்?
Nepal violent

இதையடுத்து, காத்மண்டில் உள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள அனைத்து இந்தியர்களும் நிலைமை சீரடையும் வரை நேபாளத்திற்குச் செல்வதைத் ஒத்திவைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம், தற்போது நேபாளத்தில் இருக்கும் இந்தியர்கள் தங்கள் தற்போதைய வசிப்பிடங்களில் தஞ்சம் அடையவும், சாலைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், அனைத்து எச்சரிக்கையுடனும் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com