

மேறகாசிய நாடுகளில் நடைபெற்று வரும் கடுமையான போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான்.
இதற்கு முன்னதாக ஈரானில் உள்ள தெஹ்ரான் மற்றும் கராஜ் நகரங்களை இணைக்கும் பி1 பாலத்தின் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே தற்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான்.
ஈரானில் உள்ள மிகப்பெரிய பாலமான பி1 பாலத்தை அமெரிக்கா தகர்த்ததை அடுத்து, உலகின் மிகப்பெரிய பாலம் தகர்ந்து விட்டது. காலம் கடந்து விடுவதற்கு முன் ஒப்பந்தம் செய்யுங்கள் என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இனியும் ஈரான் ஒப்பந்தம் செய்ய இறங்கி வராவிட்டால், அந்நாட்டில் எதுவும் மிச்சம் இருக்காது எனவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் மீதான அமெரிக்காவின் இந்தத் தாக்குதல், எங்களை அடிபணிய வைக்காது என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான்.
போர் முடிவுக்கு வராத சூழலில், இரு தரப்பிலும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.