

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிடவில்லை, மாறாக திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதனால் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்து பணம் கட்டிய பல நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கமலஹாசனின் மக்கள் நீதி மையம் விருப்பு மனு கட்டணமாக 60 பேரிடம் வசூலித்த 30 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறியதால் அக்கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏ சீட்டும், கொடுத்த காசும் கிடைக்காததால் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மையம் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததுடன் 60 பேரிடமிருந்து பெறப்பட்ட ரூ.30 லட்சம் கட்சி வளர்ச்சி நிதிக்கு சென்று விட்டது என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.