வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செஞ்சும் இன்னும் ரீபண்ட் வரலையா? இதுதான் காரணம்...!

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செஞ்சு ஒன்றரை மாதத்திற்கும் மேலாகியும் இன்னும் ரீஃபண்ட் வரவில்லை என்பவர்களுக்கு வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
Income tax return forms
Income tax
Published on

வருமான வரி வருமானம் அல்லது ஐடிஆர் என்பது நீங்கள் அரசாங்கத்திடம் தாக்கல் செய்யும் ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கான உங்கள் வருமானம் மற்றும் வரி பொறுப்பு அறிக்கையாகும். வரி ரீஃபண்ட் என்பது செலுத்தப்பட்ட கூடுதல் வரிகளை திருப்பிச் பெறுவதாகும்.

நாடு முழுவதும் உள்ள பல ஆயிரம் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்து 1 மாதங்களுக்கும் மேலாகியும் இன்னும் ரீபண்ட் (refund) கிடைக்காமல் காத்திருக்கின்றனர். இதுகுறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதாவது, வருமான வரி ரிட்டர்ன்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே ரீஃபண்ட் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, இதுவரை ரீஃபண்ட் வழங்கப்பட்ட பிறகே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வந்தநிலையில் இனி, முழுமையாக ஆய்வு செய்து சந்தேகங்கள் முழுமையாகத் தீர்க்கப்பட்ட பின்னரே ரீஃபண்ட் வழங்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது, ரீஃபண்ட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிர்ச்சியடைச்செய்துள்ளது.

வருமான வரித்துறை வட்டாரங்களின் தகவல்படி, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தாண்டு சுமார் 1.65 லட்சம் ரிட்டர்ன்களை தீவிரமாக ஆய்வு செய்ய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
Alert: வருமான வரி தாக்கல் படிவங்கள்... யாருக்கு எந்த படிவம்? தேர்வு முக்கியம்!
Income tax return forms

நீங்கள் சம்பளம் வாங்கும் ஊழியராக இருந்தால், இந்தியாவில் உங்கள் வருமான வரி வருமானத்தை ஆன்லைனில் தாக்கல் செய்ய இந்த ஆவணங்களை இணைக்க வேண்டியது கட்டாயம்.

* பான் கார்டு

* ஆதார் அட்டை

* உங்கள் வேலைபார்க்கும் இடத்தில் இருந்து வழங்கப்பட்ட படிவம்-16 பகுதி A மற்றும் B

* படிவம் 26AS

* மாத வாரியான சம்பள பட்டியல்கள்

* வரி செலுத்துவோர் தகவல் அறிக்கை (TIS)

வருமான வரி திரும்பப் பெறுதல் தொடர்பான கேள்விகளுக்கு, வரி செலுத்துவோர் 'ஆய்கர் சம்பார்க் கேந்திரா'வைத் தொடர்பு கொள்ள வேண்டும். கட்டணமில்லா எண் 1800-180-1961 அல்லது refunds@incometaxindia.gov.in என்ற மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை அழைப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, ஒரு வரி செலுத்துவோர் 2024-2025 நிதியாண்டில் ரூ. 10,000 வரி செலுத்தியிருந்தாலும், அவர்களின் உண்மையான வரி பொறுப்பு ரூ. 8,000 மட்டுமே என்றால், அவர்கள் வருமான வரித் துறையிடமிருந்து ரூ.2,000 பணத்தைத் திரும்பப் பெறத் தகுதியுடையவர்கள். வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அது சரிபார்க்கப்பட்டவுடன், வருமான வரித்துறை வரி அறிக்கையைச் செயலாக்கத் தொடங்கும்.

வரி அறிக்கையைச் செயலாக்கிய பிறகு, வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க சுமார் 4-5 வாரங்கள் ஆகும். இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் பணத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால், வரி செலுத்துவோர் வருமான வரிப் படிவத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்த தகவலைச் சரிபார்க்க வேண்டும். அத்துடன் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக ஐடி துறையிலிருந்து ஏதேனும் அறிவிப்பு வந்துள்ளதா என மின்னஞ்சலைச் சரிபார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
2024ல் வருமான வரி தாக்கலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்!
Income tax return forms

இவ்வாறு நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு ஊழியர்களால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி ரிட்டர்ன்கள் வருமான வரித் துறையின் கீழ் பல அடுக்காக தீவிர கண்காணிப்பில் உள்ளன. வருமான வரித் துறையானது பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிந்து, வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்காணித்து இதன் மூலம் சரியான முறையில் வருமான வரி செலுத்துவதை உறுதி செய்ய முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com