

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் தான் இருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.
இந்த வாரத்தில் முதல் 3 நாட்கள் தங்கத்தின் விலை சரிவை நோக்கியே சென்றது. ஆனால் நேற்று காலை மாற்றமின்றி விற்பனையான தங்கம், மாலையில் ஒரு கிராம் ரூ.200-ம், ஒரு சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. தங்கம் மட்டுமின்றி, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.270-க்கு விற்பனையானது.
நேற்றைய (ஏப்ரல் 30) நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.14,100-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,800-க்கும் விற்பனையானது.
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், மாதத்தின் தொடக்க நாளான இன்று (மே 1) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது.
ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.1,12,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,050-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறலந்து, ரூ.265-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 நாட்களாக ரூ.2,650 வரை குறைந்த தங்கத்தின் விலை நேற்று மாலை திடீரென ரூ.1,600 உயர்ந்தது. இந்நிலையில் மாதத்தின் தொடக்க நாளான இன்று ரூ.400 குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.