

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் நிலையில், இன்று (ஏப்ரல்.17) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் செங்கல்பட்டில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் இலவச திட்டங்கள் கொடுக்க கவர்மெண்ட் தேவையில்லை, அது ஜவுளிக்கடையின் வேலை. ஆடித்தள்ளுபடி, அமாவாசை தள்ளுபடி, தீபாவளி தள்ளுபடி என்பதெல்லாம் அவர்களின் வேலை.
ஒரு அரசாங்கத்தின் கடமை கல்வி, மருத்துவம், குடிநீர் வினியோகம் ஆகியவை தான். நடிகர் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் " சேலை வேட்டி கேட்காதீங்க டா , வேலை வெட்டி கேளுங்கடா" என்று கூறுவார். எம்ஜிஆர் "பத்து ரூபாய் கொடுப்பவனை பார்த்து ஓட்டு போடாதீர்கள், பசியை போக்குபவனுக்கு ஓட்டு போடுங்கள்" என்று கூறியுள்ளார். ஆனால், அவரது கட்சியினர் 10,000 ரூபாய் டோக்கன் கொடுக்கின்றனர்.
அறிஞர் அண்ணாவிடம் " அரசின் வருமானத்தை பெருக்க சாராயக்கடை திறங்கள்" என்று கூறப்பட்டது. அதற்கு அவர் "அந்த காசு குஷ்டரோகியின் கையில் உள்ள வெண்ணை போன்றது" என்று கூறியிருக்கிறார். அவரது பேரைச் சொல்லி ஆட்சியில் இருப்பவர்கள் அந்த வெண்ணையை சாப்பிடுகின்றனர். இவ்வாறு இன்றைய பிரச்சாரத்தில் சீமான் , ரஜினி,எம்ஜி ஆர், அண்ணா உள்ளிட்டவர்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்.