

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார். இவர் திருநெல்வேலி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.இந்நிலையில் தான் தொகுதி பங்கீட்டில் பாஜகவுக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால் நயினார் நாகேந்திரன் இந்த முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் நயினார் நாகேந்திரன் இந்த முறை நெல் லையை விட்டு சாத்தூரில் போட்டியிட உள்ளதாக ஆரம்பம் முதலே செய்திகள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நயினார் நாகேந்திரன், “அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெல்லும் என்றும் தான் சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில் தனது தொகுதியை நயினார் நாகேந்திரன் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.