இனிமேல் ஜெயிலில் இருந்து ஆட்சி செய்ய முடியாது! அமித்ஷாவின் புதிய மசோதா..!

Amit shah
Amit shah
Published on

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு (130வது திருத்த) மசோதா, 2025-ஐ பாதுகாத்து, அது அரசியல் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் என்றும், அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பொருந்தும் என்றும் வலியுறுத்தினார்.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்

இந்த மசோதா, பிரதமர், முதலமைச்சர்கள், மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளுக்காக 30 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டால், அவர்கள் தானாகவே பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறுகிறது. இந்த மசோதா தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் 31 உறுப்பினர்கள் கொண்ட கூட்டு நாடாளுமன்றக் குழுவின் (JPC) ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அமித் ஷா இந்த மசோதா ஆளுங்கட்சியின் தலைவர்கள் உட்பட அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்று தெரிவித்தார். "நரேந்திர மோடிஜி பிரதமரின் பதவியையும் இதில் சேர்த்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்." என்றும் கூறினார்.

"ஒரு முதல்வர் அல்லது பிரதமர் சிறையில் இருந்துகொண்டு ஆட்சி நடத்துவது ஜனநாயகத்தின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரானது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், இத்தகைய வெட்கக்கேடான நிலை ஏற்படும் என்று கற்பனை செய்திருக்க மாட்டார்கள்." என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:
அழிவின் விளிம்பில் இருக்கும் ஆமைகள்: பாதுகாப்பது மனித சமூகத்தின் கடமை!
Amit shah

எதிர்க்கட்சிகளின் விமர்சசங்களுக்கு பதிலளித்த அமித் ஷா, "நீதிமன்றங்கள் இந்தச் சட்டத்தின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு சரியான நேரத்தில் பிணை வழங்குவது குறித்து முடிவெடுக்கும். பிணை கிடைத்த பிறகு, அவர்கள் மீண்டும் பதவிக்கு வரலாம்" என்றும் விளக்கினார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அமித் ஷா நிராகரித்தார். இது எந்தவொரு குறிப்பிட்ட கட்சியையோ அல்லது தலைவரையோ குறிவைக்கவில்லை என்றும், நீதிமன்றங்கள் இந்தச் சட்டத்தின் தவறான பயன்பாட்டைத் தடுக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த மசோதா, பா.ஜ.க. அல்லாத அரசாங்கங்களை நிலைகுலைக்க ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இதையும் படியுங்கள்:
வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவிற்கு வரும் பேராபத்து..! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Amit shah

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்த மசோதாவைக் கூட்டு நாடாளுமன்றக் குழுவில் விவாதிக்க மறுத்து, கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது. இதற்கு அமித் ஷா, "அவர்கள் விவாதத்தில் பங்கேற்க நாங்கள் வாய்ப்பு வழங்குகிறோம், ஆனால் அவர்கள் மறுத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று பதில் அளித்தார்.

இந்த மசோதா, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com