இனி டோல்கேட்டில் நிற்க வேண்டாம்! மத்திய அரசின் புதிய MLFF திட்டம்..!

டோல்கேட்களில் வாகனங்கள் நிற்பதைத் தவிர்க்கவும், எரிபொருள் விரயத்தைத் தடுக்கவும் மத்திய அரசு இந்த புதிய வழிமுறைகளைக் கொண்டு வருகிறது.
toll plazas Nitin Gadkari
toll plazas Nitin Gadkari
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை (Toll Plazas) முழுமையாக அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக மல்டி-லைன் ஃப்ரீ ஃப்ளோ (Multi-Lane Free Flow - MLFF) என்ற தடையற்ற புதிய சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

டோல்கேட்களில் வாகனங்கள் நிற்பதைத் தவிர்க்கவும், எரிபொருள் விரயத்தைத் தடுக்கவும் மத்திய அரசு இந்த புதிய வழிமுறைகளைக் கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் விரைவில் டோல்கேட்டுகள் (Toll Gate) முற்றிலும் இல்லாத நிலைக்கு மாறவுள்ளது. வாகனங்கள் டோல் பிளாசாக்களில் நிற்பதைத் தவிர்க்கவும், எரிபொருள் விரயத்தைக் குறைக்கவும் மற்றும் டோல் நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இந்திய அரசு 'மல்டி-லைன் ஃப்ரீ ஃப்ளோ' (Multi-line Free Flow) என்ற தடையற்ற டிஜிட்டல் டோல் முறையைக் கொண்டுவர உள்ளது.

மல்டி-லைன் ஃப்ரீ ஃப்ளோ என்பது பொதுவாக சாலைப் போக்குவரத்து வடிவமைப்பு அல்லது மென்பொருள் நிரலாக்கம் (Programming) மற்றும் தரவு மேலாண்மையில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்ப வார்த்தையாகும். ஏற்கனவே பாஸ்டேக் முறை மூலமாக காத்திருப்பு நேரம் பெருமளவில் குறைக்கப்பட்டு, ரொக்கப் பணப் பரிவர்த்தனைகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் அடுத்தகட்டமாக, வாகனங்கள் டோல்கேட்களில் சிறிதும் நிற்காமல் நேரடியாகச் செல்லும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் அமைக்கப்பட உள்ளது.

புதிய MLFF முறையில், சாலைகளில் சுங்கச்சாவடி தடுப்புகள் (Barriers) எதுவும் இருக்காது. வாகனங்கள் எங்கும் நிற்காமல் தடையின்றி செல்லலாம். வாகனங்கள் மணிக்கு 80 முதல் 100 கி.மீ வேகத்தில் சுங்கப் பகுதியைக் கடந்தாலும், தானியங்கி முறையில் கட்டணம் கழிக்கப்படும்.

சாலைகளின் மேலே பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலமாக வாகனங்கள் கண்டறியப்படும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்கி எண்கணிதப் பலகை அங்கீகாரம் (Automatic Number Plate Recognition) தொழில்நுட்பம் மூலம் வாகனத்தின் நம்பர் பிளேட் ஸ்கேன் செய்யப்படும்.

மேலும், இந்த புதிய தொழில்நுட்பம் தற்போதைய FASTag மற்றும் வாகனத்தின் 'வாஹன்' (Wahan) தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டு, கட்டணம் தானாகவே கணக்கிலிருந்து கழிக்கப்படும். விரைவில் அமலுக்கு வரவுள்ள மல்டி-லைன் ஃப்ரீ ஃப்ளோ முறையால் போக்குவரத்து நெரிசல் குறையும் மற்றும் பயண நேரம் மிச்சமாகும்.

டோல்கேட் மாற்றம்
டோல்கேட் மாற்றம்

எதிர்காலத்தில் டோல் பூத்களை நீக்கிவிட்டு செயற்கைக்கோள் (Satellite Tracking) மூலமாக வாகனங்கள் பயணிக்கும் தொலைவுக்கேற்ப கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் டோல்கேட்களில் (டோல்கேட் மாற்றம்) தினமும் கோடிக்கணக்கான வாகனங்கள் நீண்ட நேரம் நின்று செல்ல வேண்டியுள்ளதால், நேரம் வீணாவதுடன், எரிபொருளும் அதிகமாக செலவாகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு புதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, முழுமையாக டிஜிட்டல் முறையிலான மற்றும் தடைகளற்ற டோல் வசூல் அமைப்பை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
போலி சுங்கச்சாவடி அமைத்து 75 கோடி வசூல். ஸ்மார்ட் மோசடி கும்பல்!
toll plazas Nitin Gadkari

இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை (Toll Plazas) முழுமையாக அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக மல்டி-லைன் ஃப்ரீ ஃப்ளோ (Multi-Lane Free Flow - MLFF) என்ற தடையற்ற புதிய சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற உலகளாவிய ஃபின்தெக் திருவிழாவில் (Global Fintech Fest 2026) பேசிய அவர், பிப்ரவரி-மார்ச் 2027-க்குள் இந்தியா முழுவதும் இந்த தடையற்ற சுங்க வசூல் முறை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் 60% முதல் 70% பணிகள் டிசம்பர் 2026-க்குள் முடிவடையும் என்றும் மார்ச் 2027-க்குள் நாடு முழுவதும் முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

பாஸ்டேக் முறை ஏற்கனவே காத்திருப்பு நேரத்தை பெருமளவில் குறைத்து, டோல் பிளாசாக்களில் ரொக்கப் பணம் மற்றும் சில்லறை தேவையை நீக்கி, கட்டணம் வசூலிக்கும் முறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. எனவே அடுத்தகட்டமாக, வாகனங்கள் டோல் பிளாசாக்களில் சிறிதும் நிற்கத் தேவையில்லாத நிலையை உருவாக்குவது தான் இலக்கு என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஜூலை 1 முதல் சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு!
toll plazas Nitin Gadkari

சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் பூஜ்ஜியமாக குறைவதால், ஆண்டுக்கு ரூ.285 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சமாகும் மற்றும் 81,000 டன் கார்பன் உமிழ்வு (CO2) குறையும்.

தற்போது சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கான செயல்பாட்டுச் செலவு 12% முதல் 15% ஆக உள்ளது. இது புதிய முறையில் 3% முதல் 4% ஆகக் குறையும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை லாபம் கிடைக்கும்.

இந்த தடையற்ற டிஜிட்டல் முறையினால், அரசின் சுங்கக் கட்டண வருவாய் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.10,000 கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, வாகன ஓட்டிகள் தங்களின் FASTag கணக்கை எளிய முறையில் வேறு வங்கிக்கு மாற்றிக் கொள்ள உதவும் 'One Tag' என்ற புதிய வசதியையும் Rajmarg Yatra செயலியில் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சுங்கச் சாவடி கட்டணம்; இன்றுமுதல் உயர்வு!
toll plazas Nitin Gadkari

இந்தியாவின் டிஜிட்டல் போக்குவரத்து உள்கட்டமைப்பின் முக்கியமான அங்கமான பாஸ்டேக்கை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு விரும்புகிறது. 'மல்டி-லைன் ஃப்ரீ ஃப்ளோ' முறையின் கீழ், வாகனங்கள் எந்தப் பௌதிகத் தடைகளிலும் நிற்காமல் டோல் புள்ளிகளைக் கடந்து செல்ல முடியும். இந்த முறை பிப்ரவரிக்குள் அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் டோல் பிளாசாக்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுச் செலவைக் குறைக்க உதவும்.

logo
Kalki Online
kalkionline.com