மக்களே உஷார்..! இந்த 2 நாட்கள் தமிழகத்தில் கனமழை கொட்ட போகுது..!

rain in tn
rain in tn
Published on

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 8, 9ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, வடக்கு சட்டீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

04-09-2025 முதல் 07-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் செப் 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம்

வரும் செப் 9ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, தேனி

10-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

நாளை (05-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒரு துண்டு இஞ்சி போதும்! இந்த நோய்களை ஓட ஓட விரட்டலாம்..!
rain in tn

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com