தைலாபுரம் தோட்டத்தில் திடீர் பேனர்: மருத்துவர் ராமதாஸ் வைத்த அறிவிப்பு பலகை.!

அரசியல் துறவறத்திற்குப் பின் பொதுமக்களைச் சந்திக்கும் ராமதாஸ் வைத்த அதிரடி நிபந்தனை
மருத்துவர் அய்யா ராமதாஸ்
PMK
Updated on

தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவிய மரத்துவர் ஐயா ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதன்படி இனி பாமக கட்சியின் அனைத்து முடிவுகளையும் தலைவர் அன்புமணி ராமதாஸ் தான் எடுப்பார் என அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசியல் துறவறம் மேற்கொண்ட ராமதாஸ், இனி தினசரி பொதுமக்களை சந்திக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்தில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு பலகை இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்னை சந்திக்க வரும் பொதுமக்கள் யாரும் அரசியல் பேச வேண்டாம் என ஏற்கனவே அவர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது தைலாபுரத்தில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படியுங்கள்:
90% உடல் பாதிப்பை வென்ற ஆட்டோ ஓட்டுநரின் மகன்: ஐஐடி மெட்ராஸில் இடம் பிடித்து சாதனை!
மருத்துவர் அய்யா ராமதாஸ்

தைலாபுரம் தோட்டத்தில் அரசியல் துறவறம் என்ற தலைப்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. தினசரி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்கள் தன்னை சந்திக்கலாம் எனவும் அந்த பேனரின் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பேனரில் சமூக நீதிக்காக போராடிய தமிழினப் போராளி மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்கள், அரசியல் துறவறம் மேற்கொண்ட காரணத்தால் மருத்துவர் அய்யா அவர்களை சந்திக்க வரும் பார்வையாளர்கள் தயவுசெய்து அரசியல் குறித்து பேச வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com