வேலை இருக்காது.. AI-க்கு மாறுங்கள்- ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரபல நிறுவனம்!

Accenture
Accenture
Published on

Accenture நிறுவனத்தில் கடந்த மூன்று மாதங்களில் 11,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், AI (செயற்கை நுண்ணறிவு) யுகத்திற்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியாத ஊழியர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மொத்தமாக $865 மில்லியன் செலவில் நிறுவனத்தை மறுசீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தையில், ஆலோசனைத் திட்டங்களுக்கான தேவை குறைந்துள்ளது மற்றும் அமெரிக்க அரசாங்க செலவினக் கட்டுப்பாடுகளும் இந்த எச்சரிக்கைக்கு முக்கியக் காரணங்களாகும்.  நிறுவனத்தின் கவனம் முழுவதுமாக செயற்கை நுண்ணறிவை நோக்கித் திரும்பி வருவதால், பழைய திறன்களுடன் இருக்கும் ஊழியர்கள் நீக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து Accenture தலைமை நிர்வாக அதிகாரி ஜூலி ஸ்வீட் பேசுகையில், "எதிர்காலத்திற்குத் தேவையான திறன் எங்களிடம் இல்லாதவர்களை, மறுதிறன் பயிற்சி அளிக்க முடியாதவர்களை, குறுகிய காலக்கெடுவுக்குள் வெளியேற்றி வருகிறோம்." என்று தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, Accenture-ன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை மூன்று மாதங்களுக்கு முன் இருந்த 7,91,000-லிருந்து 7,79,000 ஆக குறைந்துள்ளது. பணிநீக்கம் மற்றும் பிற செலவுகளுக்காக கடந்த காலாண்டில் $615 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய காலாண்டில் $250 மில்லியன் செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணிநீக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், நிறுவனம் தனது வருவாய் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த நிதியாண்டில் $69.7 பில்லியன் வருவாயைப் பதிவு செய்துள்ள Accenture, தற்போது AI (செயற்கை நுண்ணறிவு) திட்டங்களில் அதிக முதலீடு செய்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
தனியாரைப் போல் மாறும் அரசு மருத்துவமனைகள்..! வந்துவிட்டன பிரீமியம் அறைகள்..!
Accenture

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், உருவாக்கும் AI (Generative AI) திட்டங்களுக்கான புதிய ஒப்பந்தங்கள் $5.1 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் 77,000-க்கும் மேற்பட்ட AI மற்றும் Data வல்லுநர்கள் உள்ள நிலையில், வரும் ஆண்டுகளில் AI மற்றும் தரவு நிபுணர்களைக் கொண்டு ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்துவோம் என்று ஜூலி ஸ்வீட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். AI துறையில் நிபுணத்துவம் பெறாத ஊழியர்களுக்கு இது ஒரு அவசர எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com