

தமிழகத்தில் உள்ள வீட்டு உபயோகம், வணிகம் மற்றும் பிற குறைந்த அழுத்த மின்சார நுகர்வோர், அபராதங்களைத் தவிர்த்து, சரியான நேரத்தில் மின் நுகர்வுக் கட்டணங்களைச் செலுத்துவதை உறுதிசெய்ய, இனி தானியங்கிப் பற்று வசதி அறிமுகமாகவுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி நிலையம் (TNPDCL), ஃபெடரல் வங்கியுடன் இணைந்து தேசிய தானியங்கி தீர்வு மையம் (NACH) தளம் மூலம் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் முந்தைய திட்டத்தின்படி அனைத்த வீட்டு மின்சார இணைப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தவெக அரசு பொறுப்பேற்றதும் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கான திட்டத்தில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.
இந்த புதிய அரசாணையின்படி இரு மாதங்களுக்கான மின்சார பயன்பாடு 500 யூனிட்டுக்குள் இருந்தால் 200 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் 2.23 கோடி குடும்பத்துக்கு தலா ரூ.235 மிச்சமாகும்.
500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்தும் நுகர்வோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட் மின்சாரம் இலவச சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்சார கட்டணத்தை தற்போது சுமார் 85 சதவீதம் நுகர்வோர் ஆன்லைனில் செலுத்துகிறார்கள். குறிப்பாக நெட்பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், யுபிஐ, அத்துடன் தபால் நிலையங்கள், வங்கிகள், தமிழ்நாடு இசேவை மையங்கள் போன்ற பல வழிகளை பயன்படுத்துகின்றனர். ஒரு நாள் தாமதமாக கட்டணம் செலுத்தினாலும், பெரும்பாலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படுதல், அபராதம் மற்றும் மீண்டும் இணைப்புக்கான கட்டணம் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.
நுகர்வோர்களின் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும், மின்சார வினியோக நிறுவனத்திற்கு வருவாயை அதிகரிப்பதற்காகவும் மின்சார வாரியம் புதிய திட்டத்தை கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள வீட்டு உபயோகம், வணிகம் மற்றும் பிற குறைந்த அழுத்த மின்சார நுகர்வோர், அபராதங்களை தவிர்த்து சரியான நேரத்தில் மின்சார நுகர்வு கட்டணம் செலுத்துவதை உறுதி செய்ய, இனி தானியங்கி பற்று வசதியை(autopay) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வினியோக நிறுவனம் (TNPDCL) பெடரல் வங்கியுடன் இணைந்து தேசிய தானியங்கி தீர்வு மையம் (NACH)தளம் மூலம் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
வீட்டு உபயோக சேவைகள் உட்பட அனைத்து குறைந்த மின்சார நுகர்வோரும், தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம், TNPDCL இணையதளத்தில் தானியங்கிப் பற்று வசதிக்காகப் பதிவு செய்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தானியங்கி பணம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்பட்டவுடன் மதிப்பீட்டு தேதியில் இருந்து 10-வது நாளில், இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து நுகர்வுக்கட்டணங்கள் தானாகவே பற்று வைக்கப்படும். அதற்கு பிறகு ஒரு மின்னணு ரசீது உருவாக்கப்பட்டு வழங்கப்படும். தமிழ்நாடு மின்சார வினியோக நிறுவனம் தனது இணையதளத்தில் தானியங்கி பற்று வசதியை ரத்து செய்வதற்கான விருப்பத்தையும் வழங்கியுள்ளது.
வங்கிக்கணக்கில் போதிய நிதி இல்லாதது மற்றும் பிற காரணங்களால் கட்டணம் செலுத்தத் தவறினால், நுகர்வோருக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் மாற்று வழிகள் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம். கிட்டத்தட்ட 85% நுகர்வோர் மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவதால், நுகர்வோரிடமிருந்து உறுதிசெய்யப்பட்ட கட்டணங்கள் மூலம் இந்த புதிய வசதி மின் விநியோக நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.