

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தின தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜன.23, 24, 25, 26 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 550 பேருந்துகளும், 24ம் தேதி (சனிக்கிழமை) 405 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 100 பேருந்துகளும் 24ம் தேதி (சனிக்கிழமை) அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரு திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்திலிருந்து ஜன.23ம் தேதி 550, ஜன.24ம் தேதி 405 சிறப்பு பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து ஜன.23ம் தேதி 100, ஜன.24ம் தேதி 90 சிறப்பு பேருந்துகளும், மாதாவரத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஜனவரி 26-ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பவும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்கலாம்.