நிலம் வாங்கும் போது ஜாக்கிரதை: ஒரு சிறிய முதலீடு வருமான வரி சிக்கலாக மாறியது எப்படி?

கணவர் அளித்த பணப் பரிசைக் கொண்டு சொத்து வாங்கிய பெண் வரிச் சிக்கலில் சிக்கினார் — இதுகுறித்து ITAT வழங்கிய தீர்ப்பு இதோ.
income tax notice
income tax notice
Published on

ஒரு பெண் ரூ.5.58 லட்சம் மதிப்பிலான ஒரு சிறிய விவசாய நிலம் வாங்கியது, தற்போது ஒரு வரித் தகராறாக மாறி பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நாம் ஒரு சிறிய விவசாய நிலத்தை வாங்கும் போது செய்யும் பணப்பரிமாற்றங்கள் ஆதாரங்களுடன் தெளிவாக நிரூபிக்கப்படாவிட்டால், சாதாரண பரிவர்த்தனைகள் கூட எவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்பதற்கு வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் (ITAT) ஜெய்ப்பூர் அமர்வின் அண்மைய தீர்ப்பு அனைவருக்கும் ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

2008-ம் ஆண்டில் ஒரு பெண்மணி ரூ.5,58,500 மதிப்பிலான விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். அதிகாரப்பூர்வ தகவல்கள் மூலம் இந்த பணப்பரிமாற்றம் குறித்து அறிந்த வருமான வரித்துறை, அந்த முதலீட்டிற்கான ஆதாரத்தை விளக்குமாறு அந்த பெண்ணிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும், இறுதியில் பிரிவு 144-இன் கீழ் அந்த வரி மதிப்பீட்டு நடவடிக்கைகள் முறையாக முடிக்கப்படாமல், நிலத்திற்காக செலவிடப்பட்ட முழு தொகையும் விளக்கப்படாத முதலீடாகக் கருதப்பட்டது.

மேலும் அந்த பெண் மாறிமாறி அளித்த விளக்கங்கள் மேலும் சந்தேகங்களை எழுப்பின. அந்த பெண் ஆரம்பத்தில் அந்த பணம் விவசாயம் மற்றும் பால் பண்ணை நடவடிக்கைகளில் இருந்து கிடைத்த சேமிப்பில் இருந்தது வாங்கியதாக கூறினார். ஆனால் வருமான வரி ஆணையரிடம் (CIT-A) மேல்முறையீடு செய்தபோது, ரூ.5 லட்சம் தனது கணவரிடமிருந்து ரொக்கப் பரிசாகக் கிடைத்தது என்றும், மீதமுள்ள தொகை சேமிப்பிலிருந்து வந்தது என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள்:
திருமணத்திற்கு வரும் மொய் பணத்திற்கு வரி உண்டா? நீதிமன்றத் தீர்ப்பு சொல்வதென்ன..?
income tax notice

கணவரின் நிதிகள் குறித்தும் விளக்கப்பட்டது. கணவர் பரம்பரைச் சொத்தை விற்றதன் மூலம் ரூ.7 லட்சம் பெற்றதாகவும், அது முன்னரே ரொக்கமாக எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு முன்பு (சுமார் 16 மாதங்கள்) எடுக்கப்பட்ட ரொக்கம் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டு, பின்னர் நிலம் வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது என்ற கூற்றை வரி அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். விளக்கத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் ஒரு முக்கியப் பிரச்சினையாக மாறியது. வரி அதிகாரி, ஒரு மறுவிசாரணை அறிக்கையில், முன்பு கூறப்பட்டதற்கும் பின்னர் கோரப்பட்டதற்கும் இடையே உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டினார்.

இது போன்ற சூழ்நிலைகளில், பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று வரி நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அன்பளிப்பாக ஒரு தொகை பெறப்படும்போது, அதன் நிதி ஆதாரம் மற்றும் அந்தத் தொகையை வழங்குபவரின் நிதித் திறன் ஆகியவற்றை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு வரி செலுத்துவோருக்கே உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த ஐ.டி.ஏ.டி (ITAT), நிதி ஆதாரத்தை வரி செலுத்துவோர் முழுமையாக நிரூபிக்கவில்லை என்பதையும், அதே சமயம் அந்த விளக்கம் பொய்யானது என்று வரித்துறையும் நிரூபிக்கத் தவறிவிட்டது என்பதையும் சுட்டிக்காட்டியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இரு தரப்பினராலும் தங்கள் வழக்கை முழுமையாக நிலைநாட்ட முடியவில்லை.

மேலும், வரி செலுத்துவோருக்குத் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கப் போதிய வாய்ப்பு வழங்கப்படாமல் இந்த மதிப்பீடு ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டதையும் தீர்ப்பாயம் கவனித்தது.

இந்தக் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ITAT) கூடுதல் தொகை குறித்து இறுதித் தீர்ப்பை வழங்கவில்லை. மாறாக, அது மதிப்பீட்டு அதிகாரி (AO) மற்றும் வருமான வரி மேல்முறையீட்டு ஆணையர் (CIT(A)) ஆகிய இருவரின் உத்தரவுகளையும் ரத்து செய்து, வழக்கை மதிப்பீட்டு அதிகாரிக்கே திருப்பி அனுப்பியது.

இதையும் படியுங்கள்:
சொத்தைப் பெற்ற பிறகு தந்தையை துன்புறுத்திய மகன் : தானப் பத்திரத்தை ரத்து செய்தது தீர்ப்பாயம்..!
income tax notice

இந்த நிகழ்வு வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான பாடத்தை உணர்த்துகிறது. எந்தவொரு முதலீட்டிற்கும் நிலையான விளக்கத்தையும், அதற்குத் தேவையான ஆவணங்களையும் கொண்டிருப்பது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com