மொபைல் சிக்னல் துண்டிக்கப்பட்டால் எச்சரிக்கை! உங்கள் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்!

Digital scam
Digital scam
Published on

தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை எளிதாக்கிய அதே நேரத்தில், சைபர் குற்றவாளிகளுக்கு ஒரு புதிய பாதையையும் திறந்து வைத்துள்ளது. தினசரி ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகள் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து, அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். 

அண்மையில், மின்னணு சிம் எனப்படும் eSIM ஐப் பயன்படுத்தி, புதியதொரு மோசடி அரங்கேறி வருகிறது. இது மிகவும் நுட்பமானது மற்றும் ஆபத்தானது என்று சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் எச்சரித்துள்ளது. இந்த புதிய மோசடி எவ்வாறு நடக்கிறது, அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

eSIM மோசடி நடப்பது எப்படி?

eSIM மோசடி என்பது மிகவும் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வழிமுறை. இதில் குற்றவாளிகள் முதலில் ஒரு மொபைல் பயனரைத் தொடர்புகொண்டு, ஒரு போலியான eSIM ஆக்டிவேஷன் லிங்க்கை அனுப்புகிறார்கள்.

அந்த லிங்க்கை கிளிக் செய்தவுடன், பயனரின் அசல் சிம் கார்டு தானாகவே செயலிழந்து, அந்த எண்ணின் செயல்பாடுகள் அனைத்தும் குற்றவாளியின் eSIM-க்கு மாற்றப்படுகின்றன.இந்த மோசடி முழுமையாகச் செயல்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவரின் மொபைல் போனில் நெட்வொர்க் சிக்னல் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு, எந்த அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் அவர்களுக்கு வராது. ஆனால், அவர்களின் மொபைல் எண் இன்னும் குற்றவாளியின் கட்டுப்பாட்டில் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
Password-களைப் பாதுகாக்க கூகுள் குரோமில் கூடுதல் வசதி அறிமுகம்!
Digital scam

இந்த நிலையில், வங்கி அல்லது வேறு எந்தச் சேவையிலிருந்து வரும் ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP) மற்றும் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் குற்றவாளியின் eSIM-க்கு திருப்பி விடப்படும். இந்த OTP-களைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை எளிதாகப் பறித்துவிடுகிறார்கள். இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், எந்தவிதமான கடவுச்சொற்களோ, ஏடிஎம் விவரங்களோ இல்லாமல் இந்த மோசடி செய்யப்படுகிறது.

சைபர் திருட்டில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகள்:

  • யாரென்று தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள், அல்லது இணைப்புகளை ஒருபோதும் நம்ப வேண்டாம். உங்களின் மொபைல் சேவை தொடர்பான தகவல்களை உங்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ சேனல்கள் மூலமாக மட்டுமே சரிபார்க்கவும்.

  • உங்கள் மொபைல் போன் நெட்வொர்க் சிக்னலைத் திடீரென இழந்துவிட்டால், உடனடியாக உங்கள் தொலைபேசி சேவை வழங்குநரையும், உங்கள் வங்கியையும் தொடர்பு கொண்டு இந்தச் சிக்கலைத் தெரிவிக்கவும்.

  • இந்த வகையான புதிய மோசடிகள் குறித்து எப்போதும் விழிப்புணர்வுடன் இருங்கள். சமூக ஊடகங்கள் மற்றும் நம்பகமான செய்தி ஆதாரங்கள் மூலம் வரும் எச்சரிக்கைகளைப் பின்பற்றுங்கள்.

இதையும் படியுங்கள்:
ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம்: அதில் என்ன ஆதாயம்?
Digital scam

தொழில்நுட்பம் முன்னேறும்போது, அதைப் பயன்படுத்தும் விதத்தில் நாம் அதிக கவனம் செலுத்துவது அவசியம். டிஜிட்டல் உலகில் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க, இந்த எச்சரிக்கைகளைப் பின்பற்றுவது மிக அவசியம். இந்தத் தகவல்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்டு, அவர்களையும் இந்த ஆபத்தான மோசடியில் இருந்து காப்பதே ஒரு நல்ல குடிமகனின் கடமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com