எல்லைகளைக் காக்க வரும் இரும்பு நாய்கள்... இந்திய ராணுவத்தின் அதிரடி ரகசிய ஆயுதம்!

Robo Dogs
Robo Dogs
Published on

Indian military Robo Dogs:

மீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு பெரிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் சீன நிறுவனத்தின் ரோபோ நாய் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது பலருக்கும் நினைவிருக்கும். இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, நிஜமாகவே இந்த எந்திர நாய்கள் (Robo Dogs) நமக்கு எதற்குத் தேவை என்ற சிந்தனை பரவலாக எழுந்துள்ளது. 

சயின்ஸ் பிக்சன் திரைப்படங்களிலும், வீடியோ கேம்களிலும் மட்டுமே பார்த்துப் பழகிய இந்தத் தொழில்நுட்பம், இப்போது நிஜ உலகிலும் நம் கண்முன் வந்துவிட்டது. இவை வெறும் குழந்தைகள் விளையாடும் சாதாரண பொம்மைகள் கிடையாது. மனிதர்கள் நுழையவே தயங்கும் அல்லது உயிரைப் பணயம் வைத்துச் செல்ல வேண்டிய அபாயகரமான இடங்களுக்குச் சென்று வேலை பார்க்கும் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் ஆகும்.

எப்படிச் செயல்படுகின்றன?

சாதாரணமாகச் சக்கரம் வைத்துச் செயல்படும் ரோபோக்களால் மேடு பள்ளங்களில் நடக்கவோ அல்லது படிக்கட்டுகளில் ஏறவோ முடியாது. அந்த குறையைப் போக்குவதற்காகவே, ஒரு நிஜ நாயின் உடல் அமைப்பை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் நான்கு கால்களுடன் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கால்களில் உயிரியல் தசைகளுக்குப் பதிலாக சர்வோ மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதை வைத்து அவை அசால்ட்டாக மலைகளிலும் படிக்கட்டுகளிலும் ஏறி இறங்கும். இருட்டில் கூடத் தடையின்றி நடப்பதற்கு வசதியாக இதில் லிடார் எனப்படும் லேசர் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் உள்ளன. இவை சுற்றியுள்ள இடங்களை முப்பரிமாண வரைபடமாக மாற்றி, எந்தத் தடங்கலும் இல்லாமல் பயணிக்க உதவுகின்றன. வன்பொருள் மற்றும் மென்பொருளின் கலவை இதை ஒரு சூப்பர் எந்திரமாக மாற்றுகிறது.

ராணுவத்தில் ரோபோ நாய்கள்!

இந்த எந்திர நாய்கள் எதற்குப் பயன்படுகின்றன என்பதைப் பார்த்தால் நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கும். ராணுவம், பேரிடர் மீட்பு மற்றும் உளவு பார்க்கும் பணிகளில் இவை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நமது இந்திய ராணுவமே இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது என்பது மிகவும் பெருமையான விஷயம். 

பனிமலைகள், கரடுமுரடான பாதைகள் மற்றும் தீவிரமான வானிலை நிலவும் பகுதிகளில் சுமார் பதினைந்து கிலோ எடையுள்ள பொருட்களைச் சுமந்து செல்வதற்காகவே பிரத்யேகமான ரோபோ நாய்களை நமது ராணுவம் களமிறக்கியுள்ளது. இதன் மூலம் எல்லையில் உள்ள வீரர்களின் சுமையும் ஆபத்தும் கணிசமாகக் குறைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உள்நாட்டு சுற்றுலா தெரியும்; அதென்னங்க 'உள்வரும்' சுற்றுலா?!
Robo Dogs

உள்நாட்டு உற்பத்தி!

வெளிநாடுகளை மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்திற்காக நம்பியிருந்த காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது. இந்தியாவிலேயே பல புதிய நிறுவனங்கள் இதை உருவாக்கத் தொடங்கிவிட்டன. இயந்திர வடிவமைப்பு, மின்னணுவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒன்றிணைத்து மிகவும் தரமான எந்திரங்களை நமது பொறியாளர்கள் தயார் செய்கிறார்கள். 

சமீபத்தில் கூட நமது நாட்டு நிறுவனங்கள் வணிக ரீதியான புதிய மாடல் ரோபோக்களை அறிமுகப் படுத்தின. வெளிநாட்டு ரோபோக்களை விடவும், நமது நிலப்பரப்புக்கு ஏற்றவாறு நாமே தயாரிப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் வலு சேர்க்கும் ஒரு விஷயமாகும். இது தொழில்நுட்பத்தில் நமது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு மனிதர்களின் உயிரைப் பாதுகாப்பதும் முக்கியம். போர் நடக்கும் முன்களப் பகுதிகளாக இருந்தாலும் சரி, நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களாக இருந்தாலும் சரி, ஆபத்தான சூழ்நிலைகளில் மனிதர்களுக்குப் பதிலாக இந்த ரோபோ நாய்களை அனுப்புவது மிகவும் புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும்.

இதையும் படியுங்கள்:
இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்: இனி கவலையின்றி 'UPI' பயன்படுத்தலாம்..!
Robo Dogs

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை நாம் தொடர்ந்து ஊக்குவிக்கும்போது, எதிர்காலத்தில் இது போன்ற பல புதிய கண்டுபிடிப்புகள் நமது நாட்டை உலக அளவில் ஒரு பெரிய தொழில்நுட்ப வல்லரசாக மாற்றும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பாதுகாப்புத் துறையில் நாம் எடுத்து வைக்கும் மிகப்பெரிய அடி இதுவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com