உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக்: உலகிற்கு ஒரு நம்பிக்கை ஒளி!

Marine plastic
Marine plastic
Published on

நமது அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால், இந்த வசதியின் மறுபக்கம் கவலை அளிக்கிறது. மட்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் பூமியையும், நீரையும், காற்றையும் நாளுக்கு நாள் மாசுபடுத்தி வருகின்றன. வன உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு உயிரிழப்பதும், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தச் சூழலில், ஜப்பானிய விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ள ஒரு புதிய கண்டுபிடிப்பு, உலகிற்கு  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், உப்பு நீரில் கரையக்கூடிய ஒரு புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர். இந்த பிளாஸ்டிக், நாம் வழக்கமாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைப் போலவே உறுதியாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். ஆனால், இது உப்பு நீரில் கரைந்தவுடன், தீங்கு விளைவிக்காத மூலக்கூறுகளாக சிதைந்துவிடும் என்பது இதன் சிறப்பம்சம். இதன் மூலம், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

இந்த புதிய பிளாஸ்டிக் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உணவில் சேர்க்கப்படும் ஒரு பொதுவான வேதிப்பொருளும், பாக்டீரியாக்களால் சிதைக்கப்படக்கூடிய மற்றொரு கரிம வேதிப்பொருளும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த இரண்டு பொருட்களும் இணைந்து பிளாஸ்டிக்கிற்கு தேவையான வலிமையையும், நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கின்றன. மேலும், இந்த பிளாஸ்டிக் உப்பு நீரில் கரையும்போது, அது முழுமையாக மக்கிவிடுவதால், எவ்விதமான தீங்கு விளைவிக்கும் எச்சத்தையும் விட்டுச் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
உலகமே அழிஞ்சாலும் இந்த 5 பொருட்களை யாரிடமும் கடன் வாங்கிப் பயன்படுத்தாதீங்க!
Marine plastic

இந்த புரட்சிகரமான கண்டுபிடிப்பு, பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு ஒரு நிலையான தீர்வை வழங்கும் என்று நம்பப்படுகிறது. இந்த புதிய தொழில்நுட்பம் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்பட்டு, பரவலாக பயன்பாட்டிற்கு வரும்போது, நமது பூமியும், எதிர்கால சந்ததியினரும் பிளாஸ்டிக் கழிவுகளின் பாதிப்பிலிருந்து விடுபட முடியும். ஜப்பானிய விஞ்ஞானிகளின் இந்த சாதனை, உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு உந்துதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படியுங்கள்:
மரணத்தை முன்பே அறிவிக்கும் மூளை ? அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி முடிவுகள்!
Marine plastic

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com