ரோபோக்கள் நம் வேலைகளை அபகரிக்குமா? செயற்கை நுண்ணறிவின் இருண்ட பக்கம்!

Artificial intelligence
Artificial intelligence
Updated on

செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) என்பது மனித நுண்ணறிவு சார்ந்த பணிகளான கற்றல், பகுத்தறிவு, சிக்கல்களை தீர்ப்பது மற்றும் முடிவு எடுப்பது போன்றவற்றை கணினிகள் அல்லது இயந்திரங்கள் மூலம் உருவகப்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாகும்.

இது இயந்திரங்கள் தாமாகவே சூழலைப் புரிந்துகொண்டு, தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கவும், செயல் திட்டங்களை செய்யவும் உதவுகிறது. இது கணினி அறிவியலின் ஒரு பரந்த கிளையாகும். இது மனிதர்கள் செய்யும் பணிகளை செய்யக்கூடிய இயந்திரங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உற்பத்தி திறன் அதிகரிப்பு, துல்லியமான தரவு பகுப்பாய்வு, மேம்பட்ட முடிவெடுக்கும் திறன், மனிதப் பிழைகளை குறைத்தல் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் பணிகளை தானியங்கப்படுத்துதல் போன்ற நன்மைகள் இருந்தாலும் அவற்றால் ஏற்படும் தீமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

செயற்கை நுண்ணறிவின் தீமைகள்:

1. வேலை இழப்பு

நிறுவனங்களில் AI மிகவும் பொதுவானதாகி வருவதால், கிடைக்கக்கூடிய வேலைகள் குறையக்கூடும். ஏனெனில், முன்பு தொழிலாளர்கள் செய்த தொடர்ச்சியான பணிகளை AI-யால் எளிதாக கையாள முடியும். எனவே, தானியங்குமயமாக்கலின் காரணமாக சில துறைகளில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படலாம்.

2. அல்காரிதமிக் சார்பு (Algorithmic Bias)

அல்காரிதமிக் சார்பு என்பது ஒரு அல்காரிதம், அதன் பயிற்சித் தரவு அல்லது வடிவமைப்பு குறைபாடுகள் காரணமாக சில பயனர்களுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பாரபட்சமான முடிவுகளை எடுப்பதாகும். இது முறையான மற்றும் மீண்டும் மீண்டும் நிகழும் பிழைகளை உருவாக்குகிறது. இதனால் வேலை வாய்ப்பு, கடன் வழங்குதல் போன்ற பல்வேறு துறைகளில் நியாயமற்ற விளைவுகள் ஏற்படலாம். AI அமைப்புகள் பயன்படுத்தப்படும் தரவுகளில் உள்ள சார்புகளை உள்வாங்கிக் கொண்டு பாகுபாடு காட்டக்கூடும். இது நியாயமற்ற முடிவுகளுக்கு வழிவகுக்கும்.

3. தரவு தனியுரிமை

தனிநபர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவற்றின் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். AI அமைப்புகளுக்கு அதிக அளவு தரவு தேவைப்படுகிறது. இதனால் தனிப்பட்ட தகவல்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுகின்றன.

4. அதிக செலவு

AI-ஐ செயல்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிகவும் வெளிப்படையான குறைபாடு என்னவென்றால் அதன் மேம்பாடு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். AI-யால் நமக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்து செலவு மாறுகிறது. ஆரம்ப செலவு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும். அதாவது AI அமைப்புகளை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் அதிக செலவாகும்.

5. உணர்ச்சி மற்றும் படைப்பாற்றல் இல்லாமை

முடிவுகளில் உணர்ச்சிகளையும், படைப்பாற்றலையும் பயன்படுத்தும் மனிதத் திறன் AIக்கு இல்லை. படைப்பாற்றல் இல்லாததால் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகளை உருவாக்க முடியாது. ஒரு நிறுவனம் ஒரு பிரச்சனைக்கு புதிய அல்லது ஆக்கபூர்வமான தீர்வை தேடுகிறது என்றால், மனிதர்கள் அந்த தீர்வை வழங்குவதில் சிறந்த திறன் கொண்டவர்கள். உணர்திறன் மிக்க முடிவுகளை எடுக்கும் பொழுது மனிதர்கள் இயல்பாகவே உணர்ச்சி ரீதியான விளைவுகளை கருத்தில் கொள்கிறார்கள். ஆனால் AIக்கு அந்த திறன் இல்லை.

இதையும் படியுங்கள்:
நரகத்தை விடக் கொடூரம்! ஆசிட் மழை பெய்யும் அந்த கிரகம் எது தெரியுமா? திகிலூட்டும் ரிப்போர்ட்!
Artificial intelligence

6. நெறிமுறைக் கவலைகள்

AIயின் பயன்பாடு தொடர்பான நெறிமுறை சிக்கல்கள் மற்றும் தார்மீக முடிவுகள் பற்றிய கேள்விகள் எழுகின்றன. AI அமைப்புகளின் கட்டுப்பாட்டை யார் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த தார்மீக கேள்விகளை எழுப்புகிறது. AI மூலம் தவறான தகவல்கள் வேகமாக பரவக்கூடும்.

logo
Kalki Online
kalkionline.com