'ஒன்றாக நின்றால் உயர்வு'... டிசம்பர் 20: மனித ஒற்றுமை தினத்தின் உருக வைக்கும் பின்னணி!

International human solidarity day
International human solidarity day
Published on

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 20-ஆம் தேதி 'சர்வதேச மனித ஒற்றுமை தினம்’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட இந்த நாள், பன்முகத்தன்மையில் ஒற்றுமையைக் கொண்டாடுவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும், உலகளாவிய சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கும் ஒரு நினைவூட்டலாக அமைகிறது.

தினத்தின் வரலாறு மற்றும் நோக்கம்:

2005-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, ஒற்றுமையை (Solidarity) 21-ஆம் நூற்றாண்டின் அடிப்படை மற்றும் உலகளாவிய விழுமியங்களில் ஒன்றாக அங்கீகரித்தது. அதன் தொடர்ச்சியாகவே டிசம்பர் 20-ஆம் தேதியை இந்த சிறப்பு தினமாக அறிவித்தது. வறுமையை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட 'உலக ஒற்றுமை நிதியத்தின்' (World Solidarity Fund) முக்கியத்துவத்தை நிலைநாட்டவும் இந்த நாள் உதவுகிறது.

2025-ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனித ஒற்றுமை தினத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருள் 'நிலையான வளர்ச்சிக்கான ஒற்றுமை: பகிரப்பட்ட எதிர்காலத்திற்காக சமூகங்களை ஒன்றிணைத்தல்’ என்பதாகும்.

இந்தத் தினத்தின் சிறப்பம்சங்கள்:

பன்முகத்தன்மையில் ஒற்றுமை:

உலகம் முழுவதும் மனிதர்கள் வெவ்வேறு நாடுகள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், 'ஒன்றாக நிற்பதே உயர்வு' என்ற உண்மையை இந்த நாள் உரக்கச் சொல்கிறது.

அரசாங்கங்களுக்கான நினைவூட்டல்:

சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களில் நாடுகள் கொடுத்த வாக்குறுதிகளை மதிக்கவும், அவற்றைச் செயல்படுத்தவும் இந்த நாள் அரசுகளை வலியுறுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
குரங்குகளின் அசாத்திய ஆற்றல்கள் பற்றி தெரியுமா?
International human solidarity day

வறுமை ஒழிப்பு:

ஒருவரது வறுமை என்பது ஒட்டுமொத்த உலகின் பிரச்சனையாக கருத வேண்டும். உலகளாவிய வறுமையைப் போக்குவதற்கு ஒற்றுமையே ஒரே வழி. பின்தங்கிய நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவி செய்வதும், வளங்களைப் பகிர்ந்து கொள்வதும் இதன் மையப்பொருள்.

நிலையான வளர்ச்சி இலக்குகள்:

பசி, நோய் மற்றும் சமத்துவமின்மை போன்ற பிரச்சனைகளை 2030-க்குள் முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்பதை இது பறை சாற்றுகிறது.

இந்த நாளைக் கொண்டாடுவதன் அவசியம்:

இன்றைய உலகில் போர், காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகி வருவதால், தனித்தனி நாடுகளாக நின்று இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. ஒரு நாட்டின் பாதிப்பு மற்ற நாடுகளையும் பாதிக்கும் என்பதை கரோனா போன்ற பெருந்தொற்றுகள் நமக்கு உணர்த்தியுள்ளன.

இதையும் படியுங்கள்:
ஐ.நா. சபையில் அரங்கேற்றம்; ரோம் போப்பாண்டவரிடம் தங்கப் பதக்கம்: எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உலக சாதனைகள்!
International human solidarity day

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவி செய்வதும், அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதும் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். பிறர் படும் துயரத்தைத் தன் துயரமாகக் கருதும் மனப்பான்மையை வளர்க்க இந்த நாள் தூண்டுகிறது.

ஒற்றுமையின் சக்தி:

ஒற்றுமை என்பது வெறும் பேச்சில் இல்லை. செயலில் இருக்க வேண்டும். வறுமையின் பிடியில் இருப்பவர்களுக்கு ஆதரவளிப்பது, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது மற்றும் நம் அனைவரையும் பாதிக்கும் பொதுவான போராட்டங்களில் ஒருவருக்கொருவர் தோள் கொடுப்பதே இதன் உண்மையான நோக்கம். அனைவரையும் முன்னேற்றப் பாதையில் செலுத்த முயற்சி செய்ய வேண்டும். மக்களின் கரங்கள் கோர்க்கப்படும்போது, அங்கே அற்புதங்கள் நிகழத் தொடங்குகின்றன.

இதையும் படியுங்கள்:
நோபல் பரிசைப் பெற காரணமான எலிகளும் அதன் மூலம் கண்டறியப்பட்ட வைட்டமின்களும்!
International human solidarity day

உண்மையான முன்னேற்றம் என்பது வெறும் தொழில்நுட்பத்தாலோ அல்லது பணத்தாலோ வருவதல்ல; அது மனித இணைப்பிலிருந்து வருகிறது. ஒருவருக்கு ஒருவர் செய்யும் உதவி, நமது சமூகத்தை வேரோடு வலுப்படுத்துகிறது. ஒருவர் மற்றொருவரை உயர்த்தும்போது, அது ஒரு சிறிய அலை போலத் தொடங்கி, எல்லைகளைத் தாண்டிப் பரவி, உலகையே மாற்றும் ஒரு பேரலையாக மாறும்.

எல்லைகளையும் மதங்களையும் தாண்டி மனிதநேயத்தால் ஒன்றுபடுவதே இந்த தினத்தின் நோக்கமாகும். "என்னைச் சுற்றியிருப்பவர்களை நான்உயர்த்துவேன்" என்ற உறுதிமொழியை நாம் ஏற்போம். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு அமைதியான, சமமான மற்றும் பாதுகாப்பான உலகத்தைப் படைக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com