ஜூலை 11: உலக மக்கள்தொகை நாள் - 2057 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 பில்லியனை எட்டும்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ம்தே உலக மக்கள் தொகை நாள் (World Population Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
World Population Day
World Population Day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை நாள் (World Population Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 1987ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது. அதனையடுத்து, இந்நாள் உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் பெற்றது. ஐக்கிய நாடுகள் சபை, 1989 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 ஆம் நாளை உலக மக்கள் தொகை நாளாகக் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்து அறிவித்தது. உலக மக்கள்தொகை நாள், குடும்பக் கட்டுப்பாடு, பாலினச் சமத்துவம், வறுமை, தாய்வழி உடல் நலம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பல்வேறு மக்கள்தொகைப் பிரச்சினைகளில், மக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக மக்கள்தொகை நாளில், உலகில் அதிகரித்து வரும் மக்கள்தொகையால், உலக வளங்கள் நீடித்து நிலைக்க முடியாத விகிதத்தில் குறைந்து கொண்டேச் செல்வதால், இயற்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதுடன் பல்வேறு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை முதன்மைக் கருத்தாகக் கொண்டு, விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. இதேப் போன்று, அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கான கருவுறுதல் மற்றும் குழந்தைப் பிறப்பின் போது, பெண்கள் எதிர்கொள்ளும் உடல் நலப் பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மக்கள்தொகையில் சீனாவை முந்தும் இந்தியா! 800 கோடியை தொட்ட உலக மக்கள் தொகை!
World Population Day

மக்கள்தொகைப் பிரச்சனை சமூகத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பாலின சமத்துவமின்மை மற்றும் மனித உரிமைகள் சார்ந்த துறைகளில், குறிப்பாக, வளரும் நாடுகளில், எப்போதும் இல்லாத அளவுக்கு கொடூரமான குற்றங்கள் நடந்து வருகின்றன. அதிகமான மக்கள் தொகை, மனிதக் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர் போன்ற உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

உலக மக்கள் தொகையானது தற்போதைய நிலையில், 7.8 பில்லியன் என்று இருக்கிறது. உலகின் மிக உயர்ந்த மக்கள்தொகை கொண்ட நாடாக, 1,442,857,138 எனும் அளவில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, 1,388,712,570 எனும் எண்ணிக்கையுடன் இந்தியா இரண்டாமிடத்தில் இருக்கிறது.

World Population Day
World Population Day

மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது ஆண்டுதோறும் 1.31 வீதம் எனும் அளவில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாளுக்கும் 223,098 மக்கள் தொகை வீதம், ஒரு வருடத்திற்கு 81,430,910 மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

உலகில், ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் தற்போதைய மக்கள்தொகை வளர்ச்சியானது 13 சதவிகிதத்திலிருந்து, அடுத்த 300 ஆண்டுகளில் 24 வீதமாக அதிகரிக்கும் என்றும், ஐரோப்பாவில் 12 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறையுமென்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா, வங்காள தேசம் போன்ற நாடுகளில் மக்கள் தொகையின் வேகம் அதிகரிக்கும் என்றும், வரும் 2057 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 பில்லியனை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

உலக மக்கள்தொகை நாள், மக்கள்தொகையினைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழ்ந்திட வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பரப்புரைகளை அதிகரித்திட உதவுகிறது. மக்கள்தொகையினைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அம்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதுடன், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை கல்லூரி மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கான விழிப்புணர்வுப் பரப்புரைகளை அரசு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவைகளுடன் இணைந்து செயல்படலாம்.

logo
Kalki Online
kalkionline.com