அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து சிறந்த துணை!

அக்டோபர் 16: உலக மயக்கவியல் நாள்!
World Anesthesiology Day
World Anesthesiology Day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

முதன் முதலில் மயக்க மருந்து கண்டுபிடிப்பதற்குக் காரணமாக இருந்த வில்லியம் தாமஸ் கிரீன் மார்ட்டன் (William Thomas Green Morton) என்பவர், அமெரிக்கப் பல் மருத்துவர்; அறுவை சிகிச்சை வல்லுநர். இளமைப் பருவத்தில் பால்டிமோர் பல் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர், 1842 ஆம் ஆண்டில் ஹோரெல் வேல்ஸ் என்ற பல் மருத்துவருடன் கூட்டு சேர்ந்து பல் மருத்துவத் தொழிலைச் செய்து வந்தார். வேல்ஸ் உம் உணர்ச்சி மயக்க முறையில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், 1843 ஆம் ஆண்டில் இவர்களிருவருக்கு இடையிலான கூட்டுப் பல் மருத்துவத் தொழில் முடிவுற்றது.

வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் தமது மருத்துவத் தொழிலில் செயற்கைப் பற்களைப் பொருத்துவதில் தனித்திறமை பெற்றவராக விளங்கினார். செயற்கைப் பற்களைப் பொருத்துவதற்கு முதலில் பழைய பல்லின் வேரை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. பல்லின் வேர்களைப் பிடுங்குவது மிகவும் வேதனையைத் தந்தது. இதற்கு எதேனும் ஒருவகை மயக்க மருந்தைக் கண்டுபிடிப்பது இன்றியமையாததாயிற்று. 1844 ஆம் ஆண்டில் இவரின் பழைய கூட்டாளியான வேல்ஸ் 'சிரிப்பூட்டும் வாயு' எனப்பட்ட நைட்ரஸ் ஆக்சைடை வலி நீக்கும் மயக்க மருந்தாகப் பயன்படுத்திப் பரிசோதனைகள் நடத்தினார். கனக்டிக்கட் மாநிலத்தில் ஹார்ட்ஃபோர்டில் மருத்துவத் தொழிலாற்றும் போது நைட்ரஸ் ஆக்சைடைப் பல் நோய் சிகிச்சையில் வேல்ஸ் பயன்படுத்தினார். ஆனால், பாஸ்டனில் இந்த முறையைப் பொதுமக்களுக்குச் செயல் விளக்கம் செய்து காட்ட இவர் முயன்ற போது தோல்வியுற்றார்.

மோர்ட்டோன் தமது நோக்கங்களுக்கு நைட்ரஸ் ஆக்ஸைடு போதிய அளவுக்குப் பயனுடையதாக இராது என்பதை உணர்ந்தார். அதை விட ஆற்றல் வாய்ந்த ஒரு மருந்தைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். சார்லஸ் டி. ஜேக்சன் என்பவர் ஒரு மருத்துவ வல்லுநராகவும், விஞ்ஞானியாகவும் விளங்கியவர். அவர் மோர்ட்டோனிடம் ஈதரை (Ether) மயக்க மருந்தாகப் பயன்படுத்திப் பார்க்கும்படி ஆலோசனை கூறினார். ஈதருக்கு உணர்ச்சி மயக்கமூட்டுகிற பண்பு உண்டு என்பதை 300 ஆண்டுகளுக்கு முன்னரே பாராசெல்சஸ் (Paracelsus) என்ற புகழ் பெற்ற சுவிஸ் மருத்துவர் கண்டுபிடித்திருந்தார். 

இதையும் படியுங்கள்:
பட்டினி என்னும் தலையாய பிரச்சனை! பசியில்லா உலகம் படைப்போமே!
World Anesthesiology Day

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இது பற்றிய ஓரிரு அறிக்கைகள் வெளியாகி இருந்தன. ஆனால், ஈதர் பற்றி எழுதிய ஜாக்சனோ வேறு எவருமோ இந்த வேதிப்பொருளை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தியதில்லை. 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள், ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மோர்ட்டோன் ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையில் நோய் உணரா வண்ணம் செய்து புகழ் பெற்றார். வலியை அறியாமல் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை அளிக்க இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் உதவியது. மருத்துவ வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்நாளையேத் தற்போது உலக மயக்கவியல் நாள் (World Anaesthesia Day) என்று நினைவு கூரப்படுகிறது.

விழிப்புநிலை தடுமாறுதல் (Sedation) என்பது தன்னுணர்வு நிலையிலிருந்து வேறுபடும். விழித்தெழ முடியாத அரைத் தூக்கநிலை அல்லது விழிப்புநிலை தடுமாறுதல், கை கால் அசைவுகள் மந்தமாகிப் போதல், வாய்குழறுதல், எழுந்திருக்க முடியாமல் கிடத்தல், மூளையில் கார்ட்டெக்ஸின் செயல்பாடுகள் முடங்குதல் போன்ற நிலைகளைக் குறிக்கும். இந்நிலையில் தூக்கம், நினைவு இழப்பு (Unconsciousness), உடல் கட்டுநிலை (Immobility) மற்றும் வலி உணர்வு/வலி இழப்பு (Analgia) ஆகிய விளைவுள் ஏற்படும். இந்நிலையை ஏற்படுத்தும் மருந்துகள் கலந்ததுதான் மயக்க மருந்து (Anaesthesia) எனப்படுகின்றது. 

மயக்க மருந்து (Anesthetic) என்பது அறுவை சிகிச்சைகளின் போது வலி தெரியாமல் இருப்பதற்காகவும் மயக்கமடையச் செய்வதற்காகவும் கொடுக்கப்படும் மருந்து ஆகும். இம்மருந்து மனித உடலின் சுவாசம், இரத்த அழுத்தம், இரத்த ஓட்டம், இதயத்தின் செயற்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியது. மயக்க மருந்தானது தோலில் உரோஞ்சுவதன் மூலமும், மருந்து ஊசியின் மூலமும், வாயுவாகவும் மனித உடலினுள் உட்செலுத்தப்படுகின்றது. மயக்க மருந்துப் பயன்பாட்டினை அனஸ்தீசியா (Anaesthesia) என ஆங்கிலத்தில் அழைப்பர். ஜோசப் லிஸ்டர் என்பவரே நவீன மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர். கோக்கைன், மதுசாரம் ஆகியவையும் வேறுசில போதைப் பொருட்களுமே முற்காலத்தில் மயக்க மருந்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன.

இதையும் படியுங்கள்:
முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகள்!
World Anesthesiology Day

அறுவைச் சிகிச்சையின்போது வலி தெரியாமல் இருப்பதும், நடந்தது எதுவும் பிற்பாடு நினைவுக்கு வராமல் போவதும் கூட அந்த மருந்துகளின் செயலால்தான். ஒவ்வொரு மருந்தும் குறிப்பிட்ட நரம்புத் தொகுப்புகளை (குடும்பங்கள்)  இடைமறிக்கின்றன. தெளிவாகவும், துல்லியமாகவும் அவற்றின் செய்முறை தெரிந்துவிட்டால் அவை ஏன், எப்படி பக்கவிளைவுகளுக்குக் காரணமாகின்றன என்பது புரியும். பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில் மருந்துகளை வடிவமைக்க முடியலாம். மயக்க மருந்து கொடுக்கும் போது மருத்துவரோ, மருத்துவ உதவியாளரோ அருகில் இருப்பது அவசியம். எதிர்பாராத பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக நோயாளரைக் கவனிக்க அவர்களில் யாராவது ஒருவர் உடனிருத்தல் அவசியமாகும். முனைப்புக் கவனிப்புப் பிரிவில் (Intensive Care Unit) தூக்க/மயக்க மருந்தின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com