கூடைப்பந்தாட்டத்தின் பிறப்பு: ஜேம்ஸ் நைஸ்மித்தின் முதல் 13 விதிகள்!

13 விதிகள்தான் இன்றைய நவீன Basketball விளையாட்டின் அடித்தளமாக அமைந்தன. அந்த விதிகள்...
Basketball
Basketball
Published on

கூடைப்பந்தாட்டம் (Basketball) இன்று உலகம் முழுவதும் பிரபலமான ஒரு விளையாட்டு. ஆனால், இதற்கு ஒரு சுவாரஸ்யமான தோற்றக்கதை உள்ளது. டாக்டர் ஜேம்ஸ் நைஸ்மித் கனடாவில் (1861) பிறந்தவர். 1891ஆம் ஆண்டில் கூடைப்பந்தாட்டத்தை கண்டுபிடித்தார். அப்போது அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தின் Springfield YMCA Training School இல் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

தோற்றத்திற்கான காரணம்:

குளிர்காலத்தில் வெளியில் விளையாட முடியாததால், மாணவர்களுக்கு உடல் பயிற்சியாக உட்புறத்தில் விளையாடக் கூடிய ஒரு புதிய விளையாட்டை உருவாக்க வேண்டும் என்ற யோசனை நைஸ்மித்துக்கு தோன்றியது. அந்த விளையாட்டு ஓடவும், சுறுசுறுப்பாக இருக்கவும், ஆனால் வன்முறை இல்லாமல் இருக்கவும் வேண்டும் என்று அவர் நினைத்தார்.

முதல் விளையாட்டு (1891 டிசம்பர் 21):

நைஸ்மித் இரண்டு பழைய பீச் (Peach) பழக் கூடைகள் எடுத்து, உடற்கல்வி அரங்கின் மேல் பக்கச் சுவரில் ஒன்று 10 அடி உயரத்தில் பொருத்தினார். மாணவர்கள் கையில் வைத்த பந்தை அந்தக் கூடைக்குள் வீச வேண்டும் என்பதே அடிப்படை விதி. முதலில் ஒவ்வொரு அணியிலும் 9 பேர் விளையாடினர். விளையாட்டுக்கான 13 அடிப்படை விதிகளை நைஸ்மித் எழுதியிருந்தார்.

இதையும் படியுங்கள்:
உலகளவில் பிரபலமான 10 விளையாட்டுகள்!
Basketball

வளர்ச்சி:

முதலில் இது YMCA பள்ளிகளில் மட்டுமே விளையாடப்பட்டது. ஆனால் விரைவில் அது அமெரிக்கா முழுவதும் பரவியது. 1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் Basketball அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது. இன்று NBA (National Basketball Association) போன்ற உலகின் மிகப்பெரிய லீக் மூலம் கூடைப்பந்தாட்டம் உலகமெங்கும் பிரபலமானது.

முதல் 13 விதிகள்தான் இன்றைய நவீன Basketball விளையாட்டின் அடித்தளமாக அமைந்தன. அந்த விதிகள்...

1. பந்தை ஒரு கையாலோ அல்லது இரு கைகளாலோ எங்கிருந்து வேண்டுமானாலும் எறியலாம்.

2. பந்தை ஒரு கையாலோ அல்லது இரு கைகளாலோ எங்கிருந்து வேண்டுமானாலும் அடிக்கலாம். ஆனால் குத்திக் கொடுக்கக்கூடாது.

3. வீரர் பந்துடன் ஓடக்கூடாது. பந்தை பிடித்தவுடன் அவர் அங்கு நிற்க வேண்டும். (அவர் ஓடிக் கொண்டிருந்தால் மெதுவாக நிறுத்திக்கொள்ளலாம்).

4. பந்தை கையில் மட்டும் பிடிக்க வேண்டும். கை அல்லது உடலைப் பயன்படுத்தி கவ்விக்கொள்வது கூடாது.

5. எதிரியை குத்துதல், தள்ளுதல், அடித்தல், பிடித்தல் அல்லது தடுப்பது கூடாது. விதிமுறையை மீறினால் பந்து எதிரணிக்குக் கொடுக்கப்படும்.

6. தொடர்ந்து மூன்று தவறுகள் செய்தால் (போட்டியில் நடுவரால் கண்காணிக்கப்படும்) அது எதிரணிக்கு புள்ளியாக கணக்கிடப்படும்.

7. பந்தை எதிரணியின் கூடைக்குள் எறிந்து போராடினால் ஒரு புள்ளி கிடைக்கும். பந்து கூடை உள்ளே போய் அங்கு தங்க வேண்டும்.

8. பந்து வெளியில் சென்று விட்டால், அதைப் போட்டியிட்டவர் முதலில் தொடுவார்; பின்னர் அவரே மீண்டும் பந்தை விளையாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

9. நடுவர் (Referee) வீரர்களின் நடத்தை மற்றும் தவறுகளை கண்காணிப்பார். தவறுகள் குறித்து தீர்ப்பளிப்பார்.

10. இரண்டாவது நடுவர் (Umpire) பந்தின் நிலை, பந்தை யார் கையாள வேண்டும் என்பதையும் புள்ளிகளையும் பதிவு செய்வார்.

11. விளையாட்டு இரண்டு அரை நேரமாக (Half) நடைபெறும். ஒவ்வொரு அரையும் 15 நிமிடங்கள். நடுவில் 5 நிமிட ஓய்வு.

12. அதிக புள்ளிகளை எடுத்த அணி வெற்றி பெறும். சம புள்ளிகள் வந்தால் நடுவர் ஒப்புதல் அளித்தால் தொடர்ச்சி ஆட்டம் நடக்கும்.

13. விதிகளை பின்பற்றாத வீரர், விளையாட்டிலிருந்து நீக்கப்படுவார்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகவும் கடினமான விளையாட்டு போட்டிகள்..!
Basketball

இந்த விதிகள் மிகவும் எளிமையானவை. ஆனால், இவற்றிலிருந்தே இன்று உலகம் முழுவதும் காணப்படும் NBA போன்ற சிக்கலான நவீன விதிகள் வளர்ந்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com