இதயப்பூர்வமான குறிப்பு மூலம் தன் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீரர் முகமது அமீர்

Mohammad amir
Mohammad amir
Published on

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024-ல் பாகிஸ்தானுக்காக கடைசியாக விளையாடிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக  எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து விடைபெற்றார். ஆனால் கடந்த ஜூன் மாதம் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இணையுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைத்ததை தொடர்ந்து ஓய்வு முடிவை திரும்ப பெற்று மீண்டும் அணிக்கு திரும்பினார்.

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அமீர் நான்கு போட்டிகளில் 10.28 சராசரியாக ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டியில் பாகிஸ்தானின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பிறகு அவருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 32 வயதான முகமது அமீர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைதளம் இதயப்பூர்வமான குறிப்பு மூலம் அறிவித்துள்ளார்.

அதில் ''கவனமாக பரிசீலித்த பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவுகள் எளிதானவை அல்ல ஆனால் தவிர்க்க முடியாதவை. அடுத்த தலைமுறையினர் தடியடி எடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு உயர்த்த இதுவே சரியான நேரம் என்று நான் உணர்கிறேன்!" என்று அமீர் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் அவர் “எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனது வாழ்வின் மிகப் பெரிய கௌரவமாகும். பிசிபி, எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, எனது ரசிகர்களின் தொடர்ச்சியான அன்பு மற்றும் ஆதரவிற்கு நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்," என்று முகமது அமீர்  உணர்வுபூர்வமாக கூறியுள்ளளார்.

இதையும் படியுங்கள்:
உலோக சத்துக்களுக்கும் நீண்ட ஆயுளுக்கும் தொடர்பு உண்டா?
Mohammad amir

இவரின் இந்த அறிவிப்பு பாகிஸ்தான் ரசிகர்களை மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.

ஸ்பாட் பிக்சிங் குற்ற ஆண்டுகளாக பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் 2010 முதல் 2015 வரை ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்ட அமீர், தனது குற்றத்திற்காக சிறை தண்டனையும் அனுபவித்தார். அதன் பிறகு முகமது அமீர் மீண்டும் அணிக்கு திரும்பியதுடன், 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2009-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் கால்பதித்த முகமது அமீர் பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள், 62 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். பல அணியின் முக்கிய உறுப்பினரான முகமது அமீர் கருதப்பட்டார். உலகக் கோப்பைக்குப் பிறகு எந்தப் போட்டிக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
தாய்லாந்து மன்னர் முடிசூட்டலின் போது பாடப்படும் பாடல்கள் - திருப்பாவை, திருவெம்பாவை!
Mohammad amir

பாகிஸ்தானின் U-19 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அவரது முதல் பெரிய சாதனை அவர் எட்டு விக்கெட்டுகளை எடுத்ததாகும்.

ஆல்-ரவுண்டர் 35 வயதான இமாத் வாசிம் இரண்டாவது முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஒருநாள் கழித்து முகமது அமீர் ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com