விரைவில் 150 வருடங்களை சந்திக்க இருக்கும் கிரிக்கெட் விளையாட்டில் முக்கிய அம்சம் டெஸ்ட் கிரிக்கெட். மாற்றங்களை சந்தித்துள்ள டெஸ்ட் கிரிக்கெட்டில் அன்றும், இன்றும் நிகழ்வுகள் பற்றிய அலசல்.
டெஸ்ட் ஆரம்பிக்கும் முன் இரண்டு அணிகளின் கேப்டன்கள் மட்டும் மைதானத்தின் நடுவில் சென்று டாஸ் போடுவார்கள், அன்று.
படை சூழ அணி கேப்டன்கள் செல்கிறார்கள் இன்று டாஸ் போடும் வைபவத்திற்கு.
அன்று டாஸ்ஸில், வெற்றி பெற்ற கேப்டன் எதிராணி கேப்டனுக்கு கை கொடுப்பார். அவரது டீமின் முடிவை (பேட்டீங்கா, பீல்டிங்கா என்று ) தெரிவித்து விட்டு, இருவரும் சிரித்து பேசிக் கொண்டு பெவிலியனுக்கு திரும்புவார்கள்.
டாஸ் போட்ட கையோடு , மைக்கோடு காத்துக் கொண்டிருப்பவரிடம் அவர் வினவும் கேள்விகளுக்கு பதில்கள் அளிக்க வேண்டிய சூழ்நிலையயில் உள்ளனர் கேப்டன்கள் இன்று.
அன்று துவக்க பவுலிங்கை வீசுவதற்கு என்றே ஜோடி, ஜோடியாக சிறந்த வேக பந்து வீரர்கள் இருந்தனர், பெரும்பாளான அணிகளில்.
இன்று ஸ்பின் போடுபவர்கள் கூட சில அணிகளில் துவக்க ஓவர்கள் செலுத்த தயாராக உள்ளனர்.
இரண்டு அம்பயர்கள் மட்டுமே முழு டெஸ்டிற்கும், அன்று.
அம்பயர்கள், ரெப்பரீ ஆகியவர்களுக்கே தனி மினி டீம் இன்று.
அன்று இரண்டு அணிகளிலும் வீரர்கள் வெள்ளை நிற உடைகள் மட்டும் அணிந்தனர்.
இன்று வீரர்கள் முதுகில் நம்பர், அவரது பெயர் அதை தவிர சட்டையில் ஸ்பான்சர்கள் லோகோக்கள் நடுவில் அங்கே அங்கே வெள்ளை நிறம் எட்டிப் பார்க்கின்றது.
விளம்பரம் தலை காட்டாத நேரம் அன்று.
இன்று விளம்பரமில்லையேல் NO டெஸ்ட் சூழ்நிலை.
ஸ்டேடியத்திற்கு சென்று நேரில் பார்த்தது தனி திரில், அன்று.
இன்று வீட்டில் அமர்ந்து அருகில்
(டிவி உபயம்) பார்க்கலாம் இன்று. போனஸாக ரீபிளே வசதி.
அன்று பல காலம் , ரேடியோ கமெண்டரி மட்டும் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. ஆங்கில வர்ணனை ( English Commentary ) கேட்டு கற்பனையில் ஆட்டங்களை களித்தது அன்று.
இன்று டி வி யில் நேரலை ஒளி cum ஒலி பரப்பு. ஆங்கிலம் தவிர பல மொழிகள் வர்ணனைகள்.
பல வருடங்கள் ஒரு ஒவருக்கு 8 பந்துக்கள் வீசப் பட்டன டெஸ்ட் ஆட்டங்களில், அன்று.
இன்று ஓவருக்கு 6 பந்துக்கள் மட்டும் வீசப் படுகின்றன.
அன்று எதிரணி பேட்டிங் ஆடுபவர் சிறந்த ஷாட் அடித்தால் பவுலிங் செய்தவர், மற்ற பீல்டர்கள் உடனே கை தட்டி பாராட்டியதை காண முடிந்தது.
இன்று அமைதியான சூழ்நிலை குறைந்து, ஆக்கிரோஷம் தான் காணப்படுகின்றது, பல வேளைகளில்.
அன்று பவுலர் விக்கெட் வீழ்த்தினால் சக வீரர்கள் முதுகில் தட்டிக் கொடுத்தும், கை குலுக்கியும் தங்கள் மகிழ்ச்சி, பாராட்டுதல்களை மென்மையயாக தெரியப் படுத்தினர்.
இன்று காட்சிகளே வேறு. குதிப்பதும், கட்டிப் பிடிப்பது, சப்தம் போடுவது, ஆட்டம் என்று வேற லெவல் கொண்டாட்டம்.
அத்தி பூத்தார் போல் சிக்ஸர்களை காண முடிந்தது, டெஸ்டுக்களில் அன்று.
இன்று சிக்ஸர்கள் மழை டெஸ்ட் மேட்ச்சுகளிலும்.
அன்று முதல் தர ஆட்டங்களின் தாக்கம் சில டெஸ்டுகளில் இருந்தன.
ஒரு நாள் ஆட்டங்கள், டி 20 விளையாட்டுக்களின் தாக்கங்கள் டெஸ்ட் விளையாடும் போக்கையே மாற்றி அமைகின்றன, இன்று.
அன்று டெஸ்ட் மேட்ச்சுக்கள் விளையாடிய வீரர்களுக்கு கிடைத்த சன்மானம் சுலபமாக எண்ணி விடலாம்.
இன்று குறைந்த பட்சம் லட்சங்கள் மற்றும் பல விருதுகள், ரூபாய்கள், பரிசு பொருட்கள்.
அன்று நன்றாக ஆடினால் பாராட்டோடு சரி.
இன்று ஆடி விட்டால் விளம்பரங்களில் தோன்றி சம்பாதிக்க வாய்ப்புக்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இன்னும் இன்னும் சொல்லலாம்... தெரிந்தால் சொல்லுங்களேன்!