2025 IPL மெகா ஏலத்தில் வரலாறு காணாத விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்!

IPL
IPL
Published on

ஐபிஎல் (IPL) 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடந்தபோது, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆச்சரியத்தில் உறைந்து போனது. 'ஒரு வீரருக்கு இவ்வளவு கோடிகளா?' என்று ரசிகர்கள் வாயடைத்துப் போகும் வகையில், பல பழைய சாதனைகள் தவிடுபொடியாக்கப்பட்டு புதிய வரலாற்றுச் சாதனைகள் படைக்கப்பட்டன.

குறிப்பாக, இந்திய வீரர்களுக்குக் கிடைத்த மவுசு சர்வதேச வீரர்களை மிஞ்சிவிட்டது. அந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட டாப் 5 வீரர்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. ரிஷப் பண்ட்:

ஐபிஎல் (IPL) வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ₹27 கோடி என்ற பிரம்மாண்ட தொகையைச் செலுத்தி அவரை வாங்கியது. ஒரு விக்கெட் கீப்பர், அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் வருங்கால கேப்டன் என ரிஷப் பண்ட் மீதான எதிர்பார்ப்பு காரணமாக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

2. ஸ்ரேயாஸ் ஐயர்:

கடந்த சீசனில் கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த ஏலத்தில் அதிர்ஷ்டம் கிளைத்துள்ளது. கொல்கத்தா அவரை விடுவித்த நிலையில், ஒரு அனுபவமுள்ள கேப்டனைத் தேடிக்கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி பிடிவாதமாகப் போராடி ₹26.75 கோடிக்கு அவரை வாங்கியது. இதன் மூலம் ஏல வரலாற்றில் இரண்டாவது அதிக விலை கொண்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதையும் படியுங்கள்:
உலகளவில் பிரபலமான இந்திய விளையாட்டு மைதானங்கள்... வரலாறு படைத்த அரங்கங்கள்!
IPL

3. வெங்கடேஷ் ஐயர்:

எதிர்பாராத திருப்பமாக, வெங்கடேஷ் ஐயரை மீண்டும் தன் வசப்படுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி ₹23.75 கோடியைச் செலவிட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) இவரை எடுக்கக் கடைசி வரை போராடியது. ஆனால், எங்கள் வீரரை நாங்கள் விடமாட்டோம் என்ற உறுதியுடன் கே.கே.ஆர் இந்த மெகா தொகையைச் செலுத்தி அவரைத் தக்கவைத்தது. இவரது ஆல்-ரவுண்டர் திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது.

4. அர்ஷ்தீப் சிங்:

ஏலத்தின் ஆரம்பத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் அர்ஷ்தீப் சிங். பல அணிகள் இவரை எடுக்க முயற்சித்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ₹18 கோடிக்கு இவரைக் கேட்க முன்வந்தது. ஆனால், பஞ்சாப் கிங்ஸ் தனது RTM (Right to Match) கார்டைப் பயன்படுத்தி, அதே ₹18 கோடிக்குத் தனது நட்சத்திரப் பந்து வீச்சாளரை மீண்டும் தட்டிச் சென்றது.

இதையும் படியுங்கள்:
மறக்க முடியாத 2025: இந்திய அணியில் இடம், WPL-ல் கோடிகள் - தமிழக வீராங்கனை கமலினியின் அசுர வளர்ச்சி!
IPL

5. யுஸ்வேந்திர சஹால்:

ஐபிஎல் (IPL) வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 'சுழற்பந்து வீச்சாளர்' சஹாலுக்கும் இந்த ஏலம் ஜாக்பாட் ஆக அமைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட இவரை, பஞ்சாப் கிங்ஸ் அணி ₹18 கோடிக்கு வாங்கியது. அர்ஷ்தீப் மற்றும் சஹால் என இரு முக்கியப் பந்துவீச்சாளர்களுக்கும் தலா 18 கோடிகளை வாரி வழங்கியது பஞ்சாப் அணி.

2024-ல் மிட்செல் ஸ்டார்க் (₹24.75 கோடி) படைத்திருந்த சாதனையை ஒரே நாளில் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருமே முறியடித்தனர். இது ஐபிஎல் சந்தையில் இந்திய வீரர்களுக்கான டிமாண்ட் எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com