இந்தியாவில் இந்த 10 நோய்கள்தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்குதாம்! 

Deadly Disease
Deadly Disease
Published on

உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நம் இந்திய தேசம், பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று, மக்களின் உடல் நலத்தைப் பாதுகாப்பது. இன்று, நம் நாட்டில் பலரும் நோய்களின் பிடியில் சிக்கி, இளம் வயதிலேயே உயிரிழக்கும் துயர நிலை ஏற்படுகிறது. முன்பு தொற்று நோய்கள் மட்டுமே மக்களை வாட்டி வதைத்தன. ஆனால் இப்போது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பழக்கவழக்கங்களால் தொற்றா நோய்களும் சேர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

நகரமயமாக்கம், உணவுப் பழக்கங்களில் மாற்றம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் நோய்களின் தாக்கம் அதிகரித்து, இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மக்களை அதிகமாக பாதிக்கக்கூடிய நோய்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான், அவற்றை தடுப்பதற்கான வழிகளையும், சிகிச்சை முறைகளையும் மேம்படுத்த முடியும். மருத்துவ அறிக்கைகளின் படி, இந்தியாவில் அதிக இறப்புகளுக்கு காரணமான பத்து முக்கியமான நோய்களை இப்போது பார்ப்போம்.

1. சுவாசத்தை சிரமமாக்கும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) இன்று பல உயிர்களை காவு வாங்குகிறது. புகைப்பிடித்தல் பழக்கம் மற்றும் காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் இந்த நோய் ஏற்படுகிறது. 

2. இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு கரோனரி தமனி நோய் எனப்படுகிறது. இது மாரடைப்புக்கு வழிவகுத்து பல இறப்புகளை ஏற்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகள் இதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. 

இதையும் படியுங்கள்:
தொழு நோய் ஒரு தொற்று நோயா? அதைத் தடுக்க வழிகள் உண்டா?
Deadly Disease

3. நுரையீரலில் ஏற்படும் தொற்று நோயான நிமோனியா போன்ற கீழ் சுவாசக்குழாய் தொற்றுகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றன. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இது உயிருக்கே ஆபத்தாகலாம்.

4. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும் பக்கவாதம், இந்தியாவில் பலரையும் முடக்கிப் போடுகிறது, சில நேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இதன் முக்கிய காரணங்கள். 

5. நுரையீரலை தாக்கும் காசநோய் இன்னும் இந்தியாவில் ஒரு பெரிய சுகாதார பிரச்சனையாக உள்ளது. இது எளிதில் பரவும் தொற்று நோய் என்பது குறிப்பிடத்தக்கது. 

6. நீரிழிவு நோய், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, பல உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்து மரணத்திற்கு வழிவகுக்கிறது. உடல் பருமன் மற்றும் தவறான உணவு பழக்கம் இந்த நோயின் முக்கிய காரணிகள்.

7. அதிக மது அருந்துதல் மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நோய்த்தொற்றுகள் கல்லீரலை பாதித்து, கல்லீரல் சிரோசிஸ் என்ற ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்கிறது. 

இதையும் படியுங்கள்:
நீர் நிலைகள் கற்றுத் தரும் வாழ்க்கை பாடங்கள்!
Deadly Disease

8. சுத்தமில்லாத நீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுப்பழக்கங்கள் வயிற்றுப்போக்கு நோயை உண்டாக்கி, நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழப்புக்கு கூட காரணமாகலாம். முக்கியமாக கிராமப்புறங்களில் இது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.

9. மன அழுத்தம் மற்றும் விரக்தி காரணமாக தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். குறிப்பாக இளைஞர்கள் தற்கொலைக்கு அதிகம் முயற்சி செய்கிறார்கள். 

10. சாலை விபத்துக்கள் இந்தியாவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கின்றன. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலை விதிகளை மதிக்காதது போன்ற காரணங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இந்த 10 நோய்களைப் பற்றி அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், அவற்றை தடுப்பதற்கான ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மிக முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com