நோய் வருவதற்கு முதல் காரணம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே. ஒருவருக்கு எளிதில் காய்ச்சல், சளித் தொல்லை வருகிறது என்றால் அவருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே காரணம். அந்த வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை பெற உதவும் ஏழு கஷாயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. திங்கட்கிழமை
நான்கு வெற்றிலை, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி எடுத்துக்கொண்டு பத்து நிமிடம் கொதிக்க வைத்து குடிப்பதால் நாக்கு சுத்தமாவதோடு கபமும் சேராது.
2. செவ்வாய்க்கிழமை
கடுக்காய் பொடி ஒரு தேக்கரண்டி மற்றும் பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.
3. புதன்கிழமை
தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதை 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, அப்படியே இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.
4. வியாழக்கிழமை
சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் இவை அனைத்தையும் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறுசம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.
5. வெள்ளிக்கிழமை
வெந்தயம், தனியா சம அளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு தேவையான அளவு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
6. சனிக்கிழமை
முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து இவற்றை 15 நிமிடம் கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைப்பதோடு உடல் ஆரோக்கியம் பெறும்.
7. ஞாயிற்றுக்கிழமை
பால் இல்லாமல் சுக்கு மல்லி காபி தயாரித்து குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கசாயத்தை குடிக்க பழகிக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும் .