வெளியே சென்று வந்து நேராக ஏசியில் அமர்பவரா நீங்கள்.. மருத்துவர்கள் சொல்லும் பகீர் உண்மை இதோ!

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து வீட்டிற்கு வந்த மறுகணமே ஏசியை ஆன் செய்து அமர்வதால் ஏற்படும் ஆபத்தான பக்கவிளைவுகள் மற்றும் அதனை தவிர்க்கும் சரியான பயன்பாட்டு முறைகள் பற்றிய முழுமையான தகவல் இதோ.
AC side effects
AC side effectsAI Image
Updated on

AC side effects: கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பும்போது, நம் அனைவருக்கும் முதலில் தோன்றும் ஒரே எண்ணம் ஏசி அறையில் தஞ்சம் அடைவதுதான். கடும் வியர்வையில் நனைந்து வரும்போது, சில்லென்ற குளிர்ந்த காற்று படுவது ஏதோ சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும். 

ஆனால், இப்படி வெயிலில் இருந்து வந்த மறுகணமே ஏசியை ஆன் செய்து அதன் முன் அமர்வது நமது உடல் நலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதைப் பலரும் அறிவதில்லை. இந்தத் தவறான பழக்கத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும், இதனை எப்படிச் சரியாகக் கையாள வேண்டும் என்பதையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

திடீர் மாற்றத்தால் ஏற்படும் சிக்கல்!

மனித உடல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் ஒரு அற்புதமான அமைப்பைக் கொண்டுள்ளது. வெளியே அதிக வெப்பம் இருக்கும்போது, உடல் வியர்வையை வெளியேற்றி, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து தன் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்கிறது. 

இந்த நிலையில், திடீரென ஏசியின் உறைபனி காற்றில் அமரும்போது, உடலின் இயற்கை செயல்முறை பெரும் குழப்பத்திற்கு உள்ளாகிறது. இந்தத் தட்பவெப்ப நிலை மாற்றம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் குறைத்துவிடும். இதன் காரணமாகக் காய்ச்சல், சளி மற்றும் கடுமையான உடல் வலி உடனடியாக வந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சரியான நடைமுறை!

வெயிலில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன், குறைந்தபட்சம் பத்து நிமிடங்களாவது சாதாரண மின்விசிறியின் காற்றில் அமர்ந்து உடலை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். வியர்வை முழுமையாகக் காய்ந்து, உடல் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு ஏசியை இயக்குவதே மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான முறையாகும். அதேபோல, இரவில் தூங்கும்போது விடிய விடிய ஏசியை ஓடவிடுவதும் பெரும் தவறாகும். தொடர்ச்சியான குளிர்ந்த காற்று கண் வறட்சி, மூக்கு வறட்சி மற்றும் ஆஸ்துமா போன்ற மோசமான சுவாசப் பிரச்சனைகளை அதிகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் ஏன் எண்ணெய் குளியல் அவசியம்? காரணம் தெரிந்தால் வியந்து போவீர்கள்!
AC side effects

மின்விசிறி + ஏசி!

அறையை விரைவாகக் குளிர்விக்க ஒரு ஸ்மார்ட்டான வழி உள்ளது. ஏசியை இயக்கும்போது, கூடவே மின்விசிறியையும் மிதமான வேகத்தில் ஓடவிடுவது அறையின் மூலை முடுக்கெல்லாம் குளிர்ச்சியைக் கொண்டு சேர்க்கும். இதனால் ஏசியின் பயன்பாடு குறைவதோடு அதிகப்படியான மின்சாரமும் கணிசமாக மிச்சமாகும்.

மேலும், வீட்டின் ஜன்னல்களைச் சரியாக மூடி வைப்பதோடு, காற்றைத் தூய்மைப்படுத்தும் சில வீட்டுத் தாவரங்களை வளர்ப்பதும் அறையின் வெப்பத்தைக் குறைக்கப் பெரிதும் உதவி செய்யும்.

இன்றைய காலகட்டத்தில் ஏசி என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாகவே மாறிவிட்டது. அதைச் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால், அதுவே நமது உடலுக்குப் பெரும் எதிரியாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை மாற்றும் 7 ரகசியங்கள்! உங்கள் உடலில் ஒளிந்துள்ள அதிசயம் தெரியுமா?
AC side effects

வெயிலில் இருந்து வந்ததும் அவசரம் காட்டாமல், கொஞ்சம் பொறுமையாகப் ஃபேன் காற்றில் ஆறிவிட்டு, அதன் பிறகு ஏசியைப் பயன்படுத்தி உங்களின் உடல் ஆரோக்கியத்தை கொள்ளுங்கள்.


(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com