
நெஞ்சு வலி வந்து விட்டால் மாரடைப்பு வந்து விட்டதோ என்று தான் அனைவரும் நினைத்து பயந்து விடுவோம். இந்த பயம் மற்றும் பதற்றத்தின் காரணமாக வலி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மாரடைப்பு மற்றும் வாயுவால் வரும் நெஞ்சுவலியை வேறுபடுத்தும் 5 வழிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பிற பகுதியில் வலி
மாரடைப்பு வலி
நெஞ்சின் மையத்தில் அல்லது இடப்பக்கத்தில் அழுத்தம், இறுக்கம், மார்பு கனமாக இருப்பது போன்ற உணர்வு போன்ற அறிகுறிகளோடு வலியானது இடது கை, கழுத்து, முதுகு, தோள்பட்டை, தாடை போன்ற உடலின் மற்ற பகுதிகளில் பரவினால் அது மாரடைப்பு வலி.
வாயுவால் ஏற்படும் வலி
மேல் வயிறு அல்லது கீழ் மார்பில் தசை பிடிப்பு குத்துவது போல் வாயு தொல்லையால் மார்பு வலித்தால், இந்த வலி மாரடைப்பு போல உடலில் மற்ற பாகங்களுக்கு பரவாது.
2. கால அளவுகள் :
மாரடைப்பு வலி
நீண்ட நேரம் நீடித்து, வலியானது சில நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து மோசம் அடைந்தால் அது மாரடைப்பு வலியாகும்.
வாயுவால் ஏற்படும் வலி
வாயு தொல்லையால் ஏற்படும் வலி ஏப்பம், வாயு வெளியேற்றம் மற்றும் குடல் இயக்கத்தில் சில மாற்றங்களை சந்தித்தால் உடனடியாக மறந்து விடும். இந்த வலியை சிறிது நடை பயிற்சி அல்லது வயிற்றில் லேசான அழுத்தத்தை கொடுப்பது, உட்கார்ந்திருப்பது படுப்பதில் சில மாற்றங்களை செய்தால் சரி செய்யலாம்.
3. அறிகுறிகள் :
மாரடைப்பு வலி
மூச்சுத் திணறல், தலை சுற்றல், லேசான தலைவலி, குமட்டல், வாந்தி, படபடப்பு, அதிகமாக வியர்ப்பது போன்ற அறிகுறிகள் நெஞ்சு வலியுடன் சேர்ந்து ஏற்படும்போது இது மாரடைப்பிற்கான வலியாக கருதப்படுவதால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாயு தொல்லையால் ஏற்படும் வலி
வாயுத் தொல்லையால் வீக்கம், அதிகப்படியான ஏப்பம், வாயு வெளியேறுதல், வயிறு நிரம்பிய உணர்வு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் வாயு தொல்லையால் ஏற்படும் வலியாக கருதலாம்.
4. காரணங்கள் :
மாரடைப்பு வலி
மாரடைப்பு வலியானது ரத்தம் உறைதல் அல்லது குறுகலான தமனிகள் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டு சில சமயங்களில் உயிரைக் கூட பறிக்கும். உடல் உழைப்பு, மன அழுத்தம் போன்றவற்றால் இது தூண்டப்படுகிறது .
வாயுவால் ஏற்படும் வலி
காரமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவது அஜீரணம் செரிமான அமைப்பில் காற்று நிரம்பி அல்லது வாயு இருந்தால் வலி ஏற்படும். இந்த வலி உயிருக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.
5. மருந்துகள்
மாரடைப்பு வலி
மாரடைப்பு வலிக்கு செரிமானம் மருந்துகள், அமில நீக்கம் மற்றும் வாயு வெளியேறுதல் போன்ற எந்த மருந்துகளும் வலியை குறைக்காது என்பதால் அவசர சிகிச்சையே பலன் தரும்.
வாயு வலி
வாயு வெளியேற்ற மருந்துகள் செரிமான மருந்துகள், சூடான நீர் குடிப்பது, லேசான நடைப்பயிற்சி போன்றவற்றால் வாயுவால் ஏற்படும் வலியை குறைக்கலாம். வாயுவை தூண்டும் உணவை சாப்பிடுவதன் மூ்லம் வலி வருவதை தடுக்கலாம்.
மேற்கூறிய வழிகளை வேறுபாடு அறிந்து சிகிச்சை பெற்று பலன் பெற வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)