சாவி, ஹேர் பின் காதில் போடுவீங்களா? நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறால் உயிருக்கே ஆபத்து!

ear cleaning
ear cleaning
Published on

தொழில்நுட்ப வளர்ச்சியின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன ஹெட்போன்கள். ஆனால், வசதிக்காக நாம் பயன்படுத்தும் இந்தக் கருவி, நமது கேட்கும் திறனுக்கு எமனாக மாறக்கூடும் என்பதைப் பலரும் உணருவதில்லை. 

அளவுக்கு மிஞ்சினால் செவியும் நஞ்சு:

இன்றைய தலைமுறையினரிடையே ஹெட்போன் பயன்பாடு என்பது ஒரு பழக்கமாக இல்லாமல், ஒரு விதமான போதையாகவே மாறிவருகிறது. சிலர், அலுவல் சார்ந்த அழைப்புகளுக்கு மட்டும் இதனைப் பயன்படுத்தினாலும், பெரும்பான்மையானோர் இசை கேட்பதற்கும், பொழுதுபோக்கு அம்சங்களைக் காண்பதற்கும் மணிக்கணக்கில் காதுகளிலேயே வைத்திருக்கின்றனர். 

இன்னும் ஒரு படி மேலே சென்று, ஒரு நாளில் பாதிக்கும் மேற்பட்ட நேரத்தை, அதாவது 14 முதல் 15 மணி நேரம் வரை ஹெட்போன்களுடன் செலவிடுபவர்களும் இருக்கிறார்கள். இந்த தொடர்ச்சியான பயன்பாடு, நமது செவிப்பறைகளில் தாங்க முடியாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

மருத்துவ நிபுணர்களின் ஆய்வின்படி, ஹெட்போன்களைத் தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்துவது, நமது கேட்கும் திறனைப் படிப்படியாகக் குறைத்துவிடும். இது உடனடியாகத் தெரிவதில்லை; மெல்ல மெல்ல செவித்திறன் மங்கி, ஒரு கட்டத்தில் நிரந்தரக் காது கேளாமையில் கொண்டுபோய் விட்டுவிடும். 

எனவே, தேவையற்ற நேரங்களில் ஹெட்போன் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது முதல் பாதுகாப்புப் படியாகும். ஒருவேளை பயன்படுத்துவது கட்டாயமாக இருந்தால், ஒலியின் அளவை மிதமாக வைப்பது அவசியம். பொதுவாக, உங்கள் சாதனத்தின் மொத்த ஒலி அளவில் 60 சதவீதத்திற்கும் குறைவாக ஒலியை வைத்துப் பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

காதுகளைப் பாதுகாக்கும் வழிகள்:

ஹெட்போன் பயன்பாட்டால் மட்டும் காதுகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை. காதுகளைச் சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் நாம் செய்யும் சில தவறுகளும் பெரும் ஆபத்தை விளைவிக்கும். 

இதையும் படியுங்கள்:
ஹேர் டையால் ஏற்படும் ஆபத்துகள்! உஷார் மக்களே!
ear cleaning

காதில் ஏற்படும் அரிப்புக்காகவோ அல்லது அழுக்கை எடுப்பதற்காகவோ ஹேர் பின்னைகள், சாவிகள், குச்சிகள் போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவது மிகவும் அபாயகரமான செயல். இது செவிப்பறையைக் கிழித்து, நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

காதுகளைச் சுத்தம் செய்ய, பாதுகாப்பான முறைகளைக் கையாள்வது அவசியம். குளித்து முடித்தவுடன், ஒரு மென்மையான பருத்தித் துணி அல்லது தரமான இயர் பட்ஸை எடுத்து, காதின் வெளிப்பகுதியில் உள்ள ஈரத்தையும், அழுக்குகளையும் மெதுவாகத் துடைத்து எடுக்கலாம். 

இதையும் படியுங்கள்:
ஜிமிக்கி (Jimikki) கம்மல் அணிபவரா? காது தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்!
ear cleaning

காதின் உள்பகுதிக்குள் பட்ஸை செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது அழுக்கை மேலும் உள்ளே தள்ளிவிடும். காதுகளில் ஏதேனும் தீவிரப் பிரச்சனை ஏற்பட்டால், சுய வைத்தியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com