உணவை மென்று தின்பதின் மகத்துவம் தெரியுமா?

Do you know the greatness of chewing food?
Do you know the greatness of chewing food?https://www.tmcaz.com
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

பெருகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் வேலைக்காக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உணவை பொறுமையாக ருசித்து, ரசித்து சாப்பிடுவதற்கு நேரம் இல்லை. பாஸ்ட்புட், பப்பே என்று நின்றுகொண்டே உணவை அவசரமாக சாப்பிட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுகிறார்கள். இதனால் நோய்களும் பெருகி விட்டன.

உணவை பொறுமையாக மென்று தின்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தது பொய்யல்ல. பொறுமையாக ருசித்து சாப்பிட்டால்தான் அந்த உணவின் சத்து கூட உடலில் ஒட்டும் என்று சொல்வார்கள்.

உணவை குறைந்தது 32 முறையாவது மென்று சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும். உண்ணும் உணவை கூழ் போல ஆக்கி விழுங்குவது ஜீரணிக்க எளிதாக்கும்.

உணவை மென்று தின்பதால் பற்கள் வலிமையாவது மட்டுமில்லாமல், உமிழ்நீர் அதிக அளவில் சுரப்பதால் பற்களில் கிருமிகள் தாக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. அது நீங்கள் உண்ணும் மற்றும் மெல்லும் நேரத்தை குறைக்கிறது.

மெதுவாக சாப்பிட்டால் உடல் எடை குறையும். உடலுக்குத் தேவையான கலோரிகளை அதிலிருந்து எடுத்துக்கொள்வதால் நீங்கள் அதிகம் சாப்பிடாமல் இருப்பீர்கள். முழுமையாக உணவு உண்ட திருப்தியையும் பெறுவீர்கள். உணவை மென்று தின்பதால் நீரிழப்பைப் போக்கும். இது உணவிலிருந்து நீர்க்கூறுகளை பிரித்தெடுக்க உதவுகிறது. இதனால் நீரிழப்பை தடுக்கிறது.

உணவை அவசர அவசரமாக விழுங்குவதை விட அதை பொறுமையாக சாப்பிடும் போதுதான் அதன் சுவையையும் நறுமணத்தையும் உணர முடியும். உணவை பொறுமையாக சாப்பிடும்போதுதான் செரிமானத்திற்கான ஹார்மோன்களான லிப்தின், கிரெலின் போன்றவை உற்பத்தி ஆவதற்கு போதிய நேரம் கிடைக்கிறது. நன்றாக உணவை மென்று தின்பதால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவது குறையும்.

இதையும் படியுங்கள்:
கொசுக்களை இயற்கையான முறையில் விரட்டுவது எப்படி தெரியுமா?
Do you know the greatness of chewing food?

வேகமாக உண்ணுவது உடல் எடையை அதிகரிக்கக் கூடும் என்றும் உணவை மென்று தின்பது, எத்தனை முறை மெல்கிறோம், எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறோம் என்பதற்கும் உடல் எடை குறைப்பிற்கும் தொடர்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.

எனவே, இனியாவது சாப்பிட வேண்டுமே என்று அலுத்துக்கொண்டு சாப்பிடாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் உணவை ரசித்து சாப்பிட்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

logo
Kalki Online
kalkionline.com