
உயிர்க் கொல்லி நோயான புற்று நோய், பல உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுள்ளது! உலக நாடுகள் அனைத்திலுமே இந்நோய் பரவிக் கிடக்கிறது.
இந்நோய் வந்து விட்டால், காப்பாற்றவே முடியாது என்ற காலம்போய், தற்போது புற்று நோயை முழுதுமாகக் குணமாக்க முடியும் என்ற நிலைக்கு மருத்துவ உலகம் வந்துள்ளது. உலகெங்கிலும் புற்று நோயைக் குணப்படுத்தும் தீவிர ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் இந்நோய் தாக்கலாம். அப்படித் தாக்கும் பகுதியின் பெயரோடு புற்றுநோயையும் சேர்த்து அழைப்பதால், இந்நோய் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. உதாரணமாகத் தொண்டைப் பகுதியைத் தாக்குமானால் அது தொண்டைப் புற்றுநோய் என்றும், சிறு நீரகத்தைத் தாக்குமானால் சிறுநீரகப் புற்றுநோய் என்றும் பெயரிட்டு அழைக்கப்படுகிறது. ஆனாலும், அதிகப் பேரைத் தாக்குவது, நுரையீரல் மற்றும் மார்பகப் புற்று நோயே என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இரத்தப் புற்று நோய் மிகவும் கொடியதாகக் கருதப்படுகிறது!
புற்றுநோய் ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள டாக்டர் குப்தா, 'உலகில் புற்று நோயால் மக்கள் இறப்பதற்குக் காரணம் மனிதர்களின் கவனக் குறைவு மற்றும் அஜாக்கிரதையே' என்கிறார்! மேலும், நோய் பீடித்தாலும் அதனை முழுமையாகப் போக்க கீழ்க்கண்ட எளிய வழி முறைகளைக் கூறுகிறார்!
உடலில் புற்று நோய்க் கிருமிகள் ஊடுருவியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டால், முதலில் நோயால் பாதிக்கப் பட்டவர், இனிப்புப் பொருட்களை உட்கொள்வதை முழுதுமாக நிறுத்திவிட வேண்டும். இனிப்பு உடலில் இல்லை யென்றால், புற்று நோய்க்கிருமிகள் உடலில் உயிர் வாழ முடியாமல், தாங்களாகவே இயற்கை மரணமடைந்துவிடும்.
இரண்டாவதாக, நோய்வாய்ப்பட்டவர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில், வெந்நீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை முழுமையாகப் பிழிந்து, இனிப்பு எதுவும் சேர்க்காமல் அருந்த வேண்டும். ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை இவ்வாறு அருந்திவர, புற்று நோய், 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்!' என்ற விதத்தில் பறந்தோடிப் போகுமாம். மெரிலாண்ட் மருத்துவக் கல்லூரி ஆய்வுக்குழு, 'இவ்வாறு செய்வது, கீமோதெரபியைக் காட்டிலும் 1000 முறை சிறந்தது' என்று சிபாரிசு செய்கிறது!
மூன்றாவதாக, கலப்படமில்லாத, செக்கில் ஆட்டப்பட்ட தூய தேங்காய் எண்ணையை காலையிலும், மாலையிலும் 3 தேக்கரண்டி அளவுக்கு உள்ளே சாப்பிட்டு வர, வந்த வழியைப் பார்த்துத் திரும்பிப் போய் விடுமாம் 'கான்சர்' என்றழைக்கப்படும் புற்றுநோய்!
கான்சர் வந்தவர்கள், இனிப்பைச் சுத்தமாக நிறுத்திவிட்டு, மேலே கூறப்பட்டுள்ள முறைகளில் ஏதாவது ஒன்றினைத் தொடர்ந்து செய்வதன் மூலம், நிச்சயமாக நோயிலிருந்து விடுபடலாம் என்று ஆணித் தரமாக, அடித்துக் கூறுகிறார் இத்துறைக்கான மருத்துவர் குப்தா!
மாஸ்கோ மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர், குரு பிரசாத் ரெட்டியும், எலுமிச்சம்பழ வைத்தியத்தையே பரிந்துரைக்கிறார்!
இனிப்பில்லாமல், சுடு நீரில் பிழியப்பட்ட எலுமிச்சைச் சாறு நிச்சயமாகக் கான்சரைக் குணமாக்கும் என்று கூறும் அவர், தண்ணீரை விட வெந்நீருக்கே வீரியம் அதிகம் என்கிறார்!
கான்சர் நோயாளிகளுக்கும், அதனை வராமல் தடுக்க நினைப்பவர்களுக்கும் அவர் மேலும் சில தகவல்களை கூறியுள்ளார்!
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - வெள்ளையோ சிவப்போ - அடிக்கடி சாப்பிடுவது கான்சர் வராமல் தடுக்கும்!
இரவு உணவைத் தாமதமாகச் சாப்பிடுவதால், இரைப்பை கான்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகுமாம்!
வாரத்திற்கு நான்கு முட்டைகளுக்கு மேல் சாப்பிடக் கூடாதாம்!
கோழிக் கறியை அதிகம் சாப்பிடாமல் இருத்தலும் நலமாம்!
எப்பொழுதுமே பழங்களை உணவு உண்பதற்கு முன்னதாகத்தான் சாப்பிட வேண்டுமாம்! சாப்பிட்ட கையோடே பழங்களைச் சாப்பிடக் கூடாதாம்!
இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றினால் கான்சர் என்ற கொடிய நோயிலிருந்து தப்பிக்கலாம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை, நோய் வந்தவர்களால்தான் முழுமையாக உணர முடியும். கவனமாக வாழ்வதன் மூலம் கான்சரைத் தவிர்ப்போம். வருமுன் காப்பதல்லவா புத்தி சாலிகளின் செயல்... நாம் அனைவரும் புத்திசாலிகள்தானே!?