நம் முன்னோர்கள் விழாக்களில் மாவிலைக்கு ஏன் முதலிடம் கொடுத்தார்கள்? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

A garland of mango leaves has been hung at the entrance of the new house
garland of mango leaves Img credit: AI Image
Published on

தமிழர் பண்பாட்டில் எந்த ஒரு விசேஷம் என்றாலும், வீட்டின் நுழைவு வாயிலில் பச்சை பசேலென மா இலைத் தோரணங்கள் தொங்குவதைப் பார்த்திருப்போம். இது வெறும் மங்கலத்தின் அடையாளம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒரு மகத்தான அறிவியல் உண்மை பலருக்கும் தெரியாது.

தமிழர்கள் மா இலைகளை ஏன் மாவிலை (மா + இலை) என்று அழைத்தனர் தெரியுமா? 'மா' என்றால் 'பெரியது' அல்லது 'சிறந்தது' என்று பொருள். சிறந்த மருத்துவக் குணம் கொண்ட இலை என்பதால் அது மாவிலை எனப்பட்டது.

மா இலையில் ஆரோக்கிய நன்மைகள்:

  • பொதுவாக, தாவரங்கள் வேரில் இருந்து பிரிக்கப்பட்டவுடன் அதன் வாழ்நாள் முடிந்துவிடும். ஆனால், மா இலைகளுக்கு ஒரு தனித்துவமான பண்பு உண்டு. மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட பிறகும் மற்ற இலைகளை விட நீண்ட நேரம் பசுமையாக இருந்து காற்றில் ஈரப்பதத்தையும் ஆக்ஸிஜனையும் தக்கவைக்கும் திறனும், காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை உட்கொண்டு ஆக்ஸிஜனை (Oxygen) வெளியிடும் திறனும் மாவிலைக்கு உண்டு.திருமணம்,

இதையும் படியுங்கள்:
மார்கழி குளிரில் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? இது உண்மையா? மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?
A garland of mango leaves has been hung at the entrance of the new house
  • காதுகுத்து அல்லது பண்டிகை காலங்களில் வீடுகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிகப்படியான மக்கள் ஒரே இடத்தில் கூடும்போது, அங்கு கார்பன்-டை-ஆக்சைடு அளவு அதிகரித்து மூச்சுத்திணறல் அல்லது அசதி ஏற்பட வாய்ப்புள்ளது.

  • அந்தச் சமயத்தில், வாசலில் கட்டப்பட்டிருக்கும் மா இலைகள் ஒரு இயற்கையான 'ஏர் பியூரிஃபையர்' (Air Purifier) போலச் செயல்படுகின்றன. இவை காற்றில் உள்ள கிருமிகளைத் தடுத்து, சுத்தமான காற்றை வீட்டிற்குள் அனுப்புகின்றன. இதனால்தான் நம் முன்னோர்கள் மக்கள் கூடும் இடங்களில் மா இலைத் தோரணத்தை முதன்மையாக வைத்தனர்.

இதையும் படியுங்கள்:
தயிரை அடுப்பில் வைப்பவரா நீங்கள்? அப்படிச் செய்யலாமா? அதிர்ச்சித் தகவல்கள்...
A garland of mango leaves has been hung at the entrance of the new house
  • மா இலைகளில் உள்ள ஆன்டி-பயாடிக் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் காற்றில் பரவக்கூடிய நுண்கிருமிகளைக் கொல்லும் வல்லமை கொண்டவை. குறிப்பாக, விஷத்தன்மை கொண்ட கிருமிகள் வீட்டிற்குள் நுழைவதை இது ஒரு இயற்கை அரணாக நின்று தடுக்கிறது.

  • மா இலைகளில் உள்ள 'மங்கிபெரின்' (Mangiferin) என்ற வேதிப்பொருள் சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது.

  • அறிவியல் ரீதியாக, பச்சை நிறம் மனதிற்கு அமைதியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது. வாசலில் நுழையும்போதே பச்சையான தோரணத்தைப் பார்ப்பது விருந்தினர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குகிறது.

மா இலை தோரணத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

பறித்த புதிய மா இலைகளைப் பயன்படுத்துவது அதிகப்படியான ஆக்ஸிஜனைத் தரும். விசேஷம் முடிந்த பிறகும் அவை காய்ந்து தொங்கினாலும் கவலைப்பட வேண்டாம்; ஏனெனில் அவை காய்ந்த பிறகும் காற்றைச் சுத்திகரித்துக் கொண்டே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள்? - உங்கள் வயிற்றுக்குள் நடக்கும் விபரீதம் இதுதான்!
A garland of mango leaves has been hung at the entrance of the new house

இன்று பலரும் பிளாஸ்டிக் மா இலைகளைப் பயன்படுத்துகிறார்கள். இது பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம், ஆனால் மேலே குறிப்பிட்ட எந்த ஒரு அறிவியல் பலனும் இதில் கிடைக்காது.

இன்று நாம் பல ஆயிரங்கள் செலவு செய்து வீடுகளுக்குள் ஏர் பியூரிஃபையர்களைப் பொருத்துகிறோம். ஆனால், நம் முன்னோர்கள் எந்த ஒரு செலவும் இன்றி மா இலைகளின் மூலம் காற்றைச் சுத்திகரிக்கும் நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இனி உங்கள் வீட்டு விசேஷங்களில் பிளாஸ்டிக் தோரணங்களைத் தவிர்த்து, பறித்த புதிய மா இலைத் தோரணங்களைக் கட்டுங்கள்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com