
இடுப்பு வலி குறைய : முருங்கை இலையில் உப்பு சேர்த்து அரைத்து சாறு பிழிந்து இடுப்பு வலி உள்ள இடத்தில் தடவினால் பிடிப்பு விட்டுவிடும்.
சொறி, சிரங்கு குணமாக : குப்பை மேனி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி சிரங்குகளில் தேய்த்து வந்தால் நாளடையில் குணமாகும்.
நீரிழிவு நோய் தீர : அருகம்புல் சாறை மோருடன் கலந்து குடித்தால் நீரிழிவு நோய் குணமாகும்.
நுரையீரல் நோய் குணமாக : வெற்றிலைச் சாற்றில் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் சளி குறைந்து மூச்சு விட முடியும்.
வயிற்றுப் போக்கு குணமாக : சிறிது கறிவேப்பிலையை, ஒரு டீஸ்பூன் சீரகத்துடன் சேர்த்து நைசாக அரைத்து மோருடன் கலந்து குடித்தால் குணமாகும்.
அஜீரணம் சரியாக : வேப்பிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் சீரகப்பொடி, உப்பும் சேர்த்து கலந்து காலை மாலை சாப்பாட்டுடன் சாப்பிட்டால் அஜீரணம் நீங்கும்.
குடல் புண் குணமாக : பண்ணைக் கீரையுடன், பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாதத்துடன் சாப்பிட குடல் புண் குணமாகும்.
சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக : சளி இருமல் வறட்டு இருமல் தொண்டை கரகரப்பு மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு கற்பூர வல்லி இலையைச் சாறு எடுத்து தேன் கலந்து குடித்தால் குணமாகும்.
செரிமானம் குணமாக : 5 கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானம் சரியாகும். சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
கல்லீரல் ஆரோக்கியம் பெற : 5 மா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்தால் கல்லீரல் நோய், சிறுநீர் பிரச்னைகள் தீரும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.