தூக்கம் - தூக்கமின்மை... தாக்கம் என்ன? திடுக்கிடும் புள்ளிவிபரங்கள்!

Sleep - Insomnia
Sleep - Insomnia
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

நமது உடல் மற்றும் மன நலத்தைப் பராமரிப்பதில் தூக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. உணவு அல்லது தண்ணீரைப் போலவே மனித உயிர் வாழ்வுக்கு தூக்கமும் இன்றியமையாத ஒன்று என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

தூக்கம் உடலின் அனைத்துச் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த விளைவு நேர்மறையானதா அல்லது எதிர்மறையானதா? என்பது தூக்கத்தின் நலம், அதாவது காலம், தரம் மற்றும் ஓய்வின் நேரம் போன்றவற்றைப் பொறுத்தது.

அமெரிக்கத் தூக்க மருந்துக் கழகம் மற்றும் தூக்க ஆய்வுச் சங்கம் (The American Academy of Sleep Medicine, and the Sleep Research Society) வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி கீழ்க்காணும் வயதுக்கேற்ற தூக்கம் இருக்க வேண்டும்.

  • கைக்குழந்தைகள் (4 முதல் 12 மாதங்கள்) - 24 மணி நேரத்திற்கு 12 முதல் 16 மணி நேரம் (சிறு தூக்கம் உட்பட)

  • குழந்தைகள் (1 முதல் 2 ஆண்டுகள்) - 24 மணி நேரத்திற்கு 11 முதல் 14 மணி நேரம் (சிறு தூக்கம் உட்பட)

  • முன்பள்ளிக் குழந்தைகள் (3 முதல் 5 ஆண்டுகள்) - 24 மணி நேரத்திற்கு 10 முதல் 13 மணி நேரம் (சிறு தூக்கம் உட்பட)

  • பள்ளி வயதுக் குழந்தைகள் (6 முதல் 12 வயது) - 24 மணி நேரத்திற்கு 9 முதல் 12 மணி நேரம்

  • பதின்ம வயதினர் (13 முதல் 18 வயது) - 24 மணி நேரத்திற்கு 8 முதல் 10 மணி நேரம்

  • பெரியவர்கள் (18 முதல் 60+ வயது) - ஒரு இரவுக்கு 7 அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் என்று வயதுக்கேற்ற தூக்கம் உறுதியாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவிலிருக்கும் தேசியத் தூக்கம் அறக்கட்டளை (National Sleep Foundation's) எனும் அமைப்பு 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் எடுத்த வாக்கெடுப்பின் வழியிலான புள்ளி விவரங்களின்படி,

  • வார நாட்களில் இரவு 7 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூக்கம் கொள்ளும் பெரியவர்கள் (18 முதல் 60+ வயது) மிதமானது முதல் கடுமையான மனச்சோர்வு அறிகுறிகளை அனுபவிக்கும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் இருக்கிறது.

  • ஒரு இரவில் 7 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்கும் 5 பெரியவர்களில் ஒருவர் (19%) மனச்சோர்வடையும் வாய்ப்புகள் இருக்கின்றன.

  • தூக்கத்தில் திருப்தியடையாத 10 பேரில் 7 பேர் (65%) இலேசான அல்லது அதிக அளவு மனச்சோர்வு அறிகுறிகளை அடைந்திருக்கின்றனர், 31% பேர் மிதமான, கடுமையான அறிகுறிகளை அடைந்ததாகத் தெரிவித்திருக்கின்றனர்.

  • தூக்கத்தில் திருப்தியடையாத வயது வந்தவர்களில் கால் பகுதியினர் (25%) மனச்சோர்வடைவதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.

  • வாரத்தில் இரண்டு இரவுகளில் தூங்குவதில் சிரமம் உள்ள 5 பேரில் 2 பேர் (38%) இலேசான அல்லது அதிக அளவு மனச்சோர்வு அறிகுறிகளைப் பெற்றிருக்கின்றனர், 10% பேர் தங்கள் அறிகுறிகள் மிதமானது முதல் கடுமையானது என்று கூறியுள்ளனர்.

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரவுகள் தூங்குவதில் சிரமத்தை அனுபவிக்கும் சுமார் 20% நபர்கள் மனச்சோர்வை அடைந்திருக்கின்றனர்.

இந்தப் புள்ளிவிவரத்தில், பாலினத்திற்கேற்ற சில வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

  • ஆண்களை விடப் பெண்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் தூக்கமின்மை ஏற்படும் அபாயம் 40% அதிகம்.

  • மாதவிடாய் நிறுத்தத்தின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக, தூக்கத்தின் தரம் பற்றிய குறைபாடுகள் 33% முதல் 51% பெண்களிடம் இருக்கின்றன.

  • உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (Food and Drug Administration) கூற்றுப்படி, பொதுவாக தூக்கத்திற்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் அளவில் பாதியை மட்டுமே பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இரவில் தூக்கம் வரவில்லையா? 5 நிமிடத்தில் தூங்குவதற்கான செம்ம டிப்ஸ்! 
Sleep - Insomnia

தூக்கமின்மை குறித்து, கர்ப்பிணிப் பெண்களிடம் நடத்தப் பெற்ற ஆய்வின்படி,

  • கருவுற்றப் பெண்களில் 71% பேர் கருவுற்ற காலத்தில் தங்கள் தூக்கப் பழக்கம் மாறியதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

  • கருவுற்றப் பெண்களில் 10.1% பேர்களுக்குத் தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

  • கருவுற்றப் பெண்களில் 61.7% வழக்கமாகத் தூங்கும் நேரத்திற்கு முன்பாகவேத் தூங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

  • கருவுற்ற பெண்களில் 51.2% தூக்கமின்மை அறிகுறிகளை அடைந்திருக்கின்றனர்.

  • தூக்கமின்மை நடவடிக்கைகளுக்கு அடிக்கடி கழிப்பறைக்குச் செல்தல் (39.3%), வசதியான நிலையைக் கண்டறிய இயலாமை (30.7%), நடந்து கொண்டிருத்தல் (13.7%) ஆகியவைகளேக் காரணமென்று தெரிவித்திருக்கின்றனர்.

தூக்கம் வராத பலர், தூக்கத்திற்கான மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர். இது தொடர்ச்சியாக இருக்கும் நிலையில், கூடுதல் கவலைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  • 10 பெரியவர்களில் 8 பேர் (8.2%) வாரத்திற்கு 4 அல்லது அதற்கு மேல் தூங்குவதற்கு உதவும் மருந்துகளை எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

  • ஒரு வாரத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை தூக்கத்திற்காக மருந்து எடுத்துக் கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதம் வயதுக்கு ஏற்ப அதிகரித்துள்ளது.

  • தூக்க உதவி மருந்துகளைப் பயன்படுத்துபவர்களில் 80% பேர்கள் தூக்கமின்மை, சோர்வு, மந்தம், கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் நினைவில் கொள்வதில் சிரமம் மற்றும் அதிகமாக தூங்குவது உள்ளிட்ட சில எஞ்சிய விளைவுகளைச் சந்திக்கின்றனர்.

  • கவலை, மனச்சோர்வு, மனச்சிதைவு நோய் (Schizophrenia) அல்லது இளைய வாதம் (Fibromyalgia) உள்ள நபர்கள் எஞ்சிய அறிகுறிகளை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

  • இதயச் செயலிழப்பு மற்றும் மனநலக் கோளாறுகள் போன்ற ஒரே சமயத்தில் இரு நோய்கள் (Comorbid) கொண்ட நிலைமைகள் தூக்க மருந்துகளின் பக்க விளைவுகளால் மோசமடையலாம் அல்லது அதிகரிக்கலாம் என்று தூக்க மருந்துகளைத் தேடுபவர்களுக்கு சில எச்சரிக்கைகளும் விடப்பட்டிருக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com