உடலுக்கு ஆரோக்கியம் தரும் சில உணவுப் பழக்கங்கள்!

Healthy eating habits
Healthy eating habits
Published on

மது உடல் ஆரோக்கியமாக இருக்க கீழ்க்கண்ட உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பது நன்மை செய்யும் என்று நமது முன்னோர்கள் வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள். உடலுக்கு நன்மை செய்யும் சில உணவுப் பழக்கங்களை இந்தப் பதிவில் காண்போம்.

* பகலும் இரவும் சேரும் நேரமான சந்தியா காலத்தில் உணவு எதையும் சாப்பிடக்கூடாது.

* நள்ளிரவிலும் இருட்டிலும் போதிய வெளிச்சம் எதுவும் இன்றி (விளக்கு போடாமல்) இருட்டில் எதையும் உண்ணக்கூடாது.

* இரவில் எள் சாதமும், பகலில் பால் சாதமும் சாப்பிடக்கூடாது.

* எந்த இலையிலும் (தாமரை இலை தவிர) பின்புறத்தில் உணவை வைத்து சாப்பிடக் கூடாது.

* இரவில் நெல்லிக்காய், தயிர் சாதம், இஞ்சி போன்றவற்றை சாப்பிடக்கூடாது. தயிரை தவிர்த்து மோரை எடுத்துக் கொள்ளலாம்.

* தாமிர பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், பாலை ஊற்றி வைக்கவோ, குடிக்கவோ கூடாது.

* எந்த உணவையும் இறைவனுக்குப் படைத்து விட்டு (நிவேதனம் செய்து) சாப்பிடுவது நல்லது.

* உணவு சமைத்ததும் முதலில் காக்கைக்கு சாதம் வைப்பதும், சாப்பிட்டு முடிந்ததும் நாய்க்கு உணவு வைப்பதும் அவசியம் செய்ய வேண்டும்.

* வாயால் கடித்து எச்சில்படுத்திய உணவை யாருக்கும் தரக்கூடாது.

* வெண்கல பாத்திரத்தில் இளநீரை வைத்து குடிக்கக் கூடாது.

* உடல் உபத்திரவத்திற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை பாலுடன் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இதையும் படியுங்கள்:
வேலை மட்டுமல்ல; அதைப் பார்க்கும் சூழலும் நன்றாக இருக்க வேண்டும்!
Healthy eating habits

* குளிர்ச்சியான பொருளுடன் சூடான பொருட்களை சேர்த்து உண்ணக்கூடாது (ஐஸ்கிரீம் + சூடான குலோப் ஜாமுன்).

* வாழைப்பழத்தை தயிருடன் சேர்த்து கலந்து சாப்பிடக் கூடாது.

* பாலுடன் மீன் உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது. புளிப்பு சுவையுடைய ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை பால், தயிருடன் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது உடலில் நச்சுத்தன்மை உருவாகாமல் காக்கும்.

* தேனை எக்காரணம் கொண்டும் சூடு செய்யக்கூடாது. சூடு செய்யும்பொழுது அதிலுள்ள சத்துக்கள் நீங்குவதுடன், உடலில் தேவையற்ற நச்சுக்களை உருவாக்கி செரிமான பாதிப்பை ஏற்படுத்தும்.

* தேன், நெய் இரண்டுமே மருத்துவ குணம் நிறைந்தவை. ஆனால், அவை இரண்டையும் சம அளவில் சேர்க்கும்பொழுது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்றாகக் கலந்து உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

* எந்தக் கீரை உணவுடனும் தயிர், பால் சேர்த்து உண்ணக்கூடாது. அதேபோல், பாகற்காய் சாப்பிட்ட பிறகு பால் எடுத்துக்கொள்ளக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com