ஆரோக்கியம் என்பது ஒருவர் உடலில் ஓடும் இரத்தம் சுத்தமாக இருப்பதைப் பொறுத்தே அமைகிறது. நம் உடலில் ஓடும் இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும் சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.
* பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருப்பது உடல் நலனை சீர் செய்யும்.
* தினமும் இரவு உணவை 7 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். அதேபோல், உணவு உண்டு ஒரு மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.
* மதுவை அறவே தவிர்ப்பது இரத்த சுத்தத்துக்கு மிகவும் அவசியம்.
* தினசரி உடலுக்குப் போதுமான தண்ணீர் அருந்துவது சீரான இரத்த ஓட்டத்துக்குத் துணை புரிகிறது.
* இரத்த சுத்திகரிப்புக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் தினசரி உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்வது அவசியம்.
* தினமும் நான்கு வேப்ப இலைகளை பச்சையாக, வெறும் வயிற்றில் தொடர்ந்த ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வருவது, இரத்த சுத்திகரிப்புக்கு நன்கு உதவும்.
* மாதத்துக்கு ஐந்து முறை, பத்து வேப்ப இலைகளை ஒரு பாட்டில் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து, பின்பு காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிப்பது இரத்த சுத்திகரிப்புக்கு உதவும்.
* செம்பருத்திப் பூவில் பாலிபினால்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் அதிகம் உள்ளதால், செம்பருத்தி பூ டீ அருந்துவது இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.
* கேரட், பீட்ரூட், சுரைக்காய் மற்றும் மாதுளை, மாம்பழம், நாவற்பழம், நெல்லிக்காய், ஆப்பிள், துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகள் உள்ளிட்டவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, இரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.