மரணத்தில் இருந்து தப்பிக்கணுமா? - புத்தர் உண்ட அரிசி: நீங்கள் அறியாத அற்புத நன்மைகள்!

Kalanamak rice
Kalanamak rice
Published on

நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற ஆரோக்கியப் பொக்கிஷங்களில் உணவுப் பொருட்களும் அடங்கும். அப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆரோக்கியப் பயன்கள் நிறைந்த அரிசி வகைதான் 'காலாநமக்' அரிசி. வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய அரிசியான இது, வெறும் தானியம் மட்டுமல்ல, ஆன்மீக முக்கியத்துவமும், நம்ப முடியாத மருத்துவ குணங்களும் கொண்டது. 

'புத்தர் உண்ட அரிசி' என்று பெருமையுடன் அழைக்கப்படும் இது, புத்த பிட்சுக்களால் இன்றும் விரும்பி உண்ணப்படுகிறது. புத்தர் ஞானம் அடைந்த பிறகு, உத்தரப் பிரதேசத்தில் உள்ள சித்தாத் நகரை கடந்து சென்றபோது, அங்குள்ள மக்கள் தங்கள் ஆசீர்வாதத்தையும் பிரசாதத்தையும் கேட்டபோது, புத்தர் இந்த அரிசியின் நெல்மணிகளையே அவர்களுக்குப் பிரசாதமாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.

காலாநமக் அரிசியின் தனித்துவமான பண்பு அதன் ஊட்டச்சத்து செறிவாகும். மொத்தம் உள்ள 72 அத்தியாவசியத் தாது உப்புக்களில், 40 தாது உப்புக்கள் இந்த அரிசிமில் உள்ளன. வேறு எந்த அரிசி வகையிலும் இவ்வளவு கனிமச் சத்துக்கள் இருப்பதில்லை என்பது இதன் தனிச்சிறப்பு. இது ஒரு முழுமையான ஊட்டச்சத்துப் பெட்டகம் என்று கூறலாம். கருப்பு கவுனி அரிசியை விட சற்று கடினமான தன்மை கொண்ட இந்த அரிசியை அதிகம் உட்கொள்ள வேண்டியதில்லை; ஒரு வேளை உணவில் சிறிதளவு சேர்த்துக் கொண்டாலே போதுமானது. 

புத்தர்கூட இந்த அரிசியை ஒரு வேளை உணவாகவே எடுத்துக்கொண்டாராம். புத்த பிட்சுக்கள், பாறைகளில் அமர்ந்து தியானம் செய்யும்போது, பாறை இடுக்கில் ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி, அதில் இந்த அரிசியைப் போட்டு வைத்துவிடுவார்கள். சூரிய ஒளியின் வெப்பத்திலேயே அந்த அரிசி வெந்து, அதை உணவாக எடுத்துக்கொள்வார்களாம். இது அதன் தனித்துவமான சமையல் முறையையும், சத்துக்கள் அப்படியே தக்கவைக்கப்படுவதையும் காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
நுணாமரத்தின் அற்புத மருத்துவ குணங்கள்: தலை முதல் கால் வரை பலன் தரும் ஒரு மரம்!
Kalanamak rice

மருத்துவ குணங்கள்:

1. இன்று உலகையே அச்சுறுத்தும் புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தி இந்த அரிசிக்கு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்கள் உருவாவதையும், பரவுவதையும் தடுக்க உதவுகின்றன.

2. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட உகந்த அரிசி இது. இதில் உள்ள குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (Low Glycemic Index), ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கப் பெரிதும் உதவுகிறது.

3. இந்த அரிசியை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் நம் மூளையின் செயல்திறன் அதிகரித்து, மூளை பலப்படுத்தப்படுகிறது. வயதான காலத்தில் ஏற்படக்கூடிய அல்சீமர் போன்ற மூளை தொடர்பான நோய்களைத் தவிர்க்க இது உதவுகிறது.

4. கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த அரிசி ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகள், சோர்வு, ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவற்றை நீக்கக்கூடிய தன்மை இந்த அரிசியில் உள்ளது.

5. சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு அற்புதமான அரிசி. சிறுநீரகங்களை வலுப்படுத்தி, அதன் குழாய்களைச் சீர்செய்யக்கூடிய சக்தி இதற்கு உண்டு.

இதையும் படியுங்கள்:
ராஜபோகம் அரிசி: நீரிழிவு நோயாளிகளின் Best Choice!
Kalanamak rice

காலாநமக் அரிசி வெறும் உணவுப் பழக்கத்திற்கு அப்பாற்பட்டு, ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும் ஒரு சிறந்த இயற்கை மருந்து. இத்தகைய பாரம்பரிய அரிசி வகைகளைப் பாதுகாத்து, அவற்றின் நன்மைகளை உணர்ந்து, நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நம் உடல் நலத்திற்குப் பெரிதும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com