கரும்பு வாங்கும்போதும் உண்ணும்போதும் கவனிக்க வேண்டியவை!

Things to watch out for when eating sugarcane
Things to watch out for when eating sugarcanehttps://www.seithipunal.com

ரும்பில் உள்ள கணுக்கள் நன்கு இடைவெளி விட்டு இருக்க வேண்டும். அதாவது, கணுக்கள் 5 இன்ச் அல்லது 4 இன்ச் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். முக்கியமாக ஒவ்வொரு கரும்பிலும் 18 அல்லது 20 கணுக்கள் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். 18 அல்லது 20 கணுக்கள் இருந்தால்தான் அந்தக் கரும்பு நன்கு முழுவதுமாக வளர்ச்சியடைந்த கரும்பு ஆகும்.

கரும்பை அப்படியே சாப்பிட வேண்டாம், கழுவிய பிறகே சாப்பிட வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் கரும்பு சாப்பிடும் முன் அதனால் ஒவ்வாமை இருக்கிறதா? என கவனித்து உண்ண வேண்டும் என்கிறார்கள்.

கரும்பு சாப்பிட்ட உடன் நீர் குடிக்கவே கூடாது. குறைந்தது 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும். நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இதைச் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். ஆனால், அதற்கான காரணத்தைச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் கரும்பில் சுண்ணாம்புச் சத்து எனப்படும் கால்சியம் அதிகமாக உள்ளது. அதேபோல, பொட்டாசியமும் கரும்பில் நிறைந்துள்ளன. கரும்பு சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால், இந்த தாதுக்கள் தண்ணீருடன் வினைபுரியும். இதனால்தான் கரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்கிறார்கள்.

இதனால் முக்கியமாக வாயில் புண் வரும். இது தவிர, வயிற்று வலி, வீக்கம், நெஞ்சில் மெல்லிய வலி, வயிற்றுப் புண்கள், தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, கரும்பைச் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க வேண்டாம். கரும்பைச் சாப்பிட்ட உடன் நமக்கு மெல்லிய தாகம் போன்ற ஒரு உணர்வு எடுக்கத்தான் செய்யும். ஆனாலும், தண்ணீர் குடிக்காமல் கொஞ்ச நேரம் இருந்து விடுங்கள். இல்லையென்றால் வாய் வெந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
மனிதர்களின் அழிவு இவ்வளவு கொடூரமா இருக்குமா? நெனச்சி பாக்கவே பயமா இருக்கே!
Things to watch out for when eating sugarcane

கரும்புச் சாறு பித்தத்தை அகற்றும், சூட்டை தணிக்கும், குடல் புண்களை ஆற்றும், சிறந்த கிருமிநாசினி, தாது வலிமையை கூட்டும், பெண்களின் வெட்டை சூட்டை தணிக்கும், கரப்பான் அகற்றும், சிறுநீர் சுருக்கை தீர்க்கும், மலச்சிக்கலை குணப்படுத்தும், உடலுக்கு சக்தி தரும்.

கரும்பை மென்று சுவைப்பவர்களுக்கு பல் நோய் அதிகளவில் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படும் பகுதியில் வசிப்பவர்களுக்கு பற்களில் நோய் தாக்குதல் குறைவாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் கரும்பை மென்று சுவைக்கும்போது பற்கள் இயற்கையாகவே நன்கு சுத்தம் செய்யப்படுகின்றன என்கிறார்கள் அலிகர் பல்கலை ஆராய்ச்சியாளர்கள்.

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக, பெருங்குடல், நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com