50 வயதிற்கு மேல் பெண்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்! 

women over 50
Things women over 50 should pay attention to!
Published on

50 வயது என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திருப்புமுனை ஆகும். இதுவரை பெண்கள் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருப்பார்கள். இனிவரும் காலங்களில் தங்களை எப்படி பராமரித்துக் கொள்வது என்பது குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டும். 50 வயதிற்கு மேல் பெண்கள் எதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். 

உடல்நலம்: 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில், இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், எலும்பு முறிவு, புற்றுநோய் போன்றவை அடங்கும். இவற்றைத் தடுக்க பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, போதுமான தூக்கம் போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 

மனநிலை: இந்த குறிப்பிட்ட வயதில் பெண்களுக்கு பதட்டம், மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை சமாளிக்க தியானம், யோகா, சுவாசப் பயிற்சிகள் போன்ற மனதைத் தளர்த்தும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவது மனநிலையை மேம்படுத்த உதவும். 

சமூக உறவுகள்: 50 வயதுக்கு மேல் பெண்கள் தனிமையாக உணரலாம். ஏனெனில், அவர்களது பிள்ளைகள் திருமணம் ஆகி அவர்களது வேலையைப் பார்க்க சென்று விடுவார்கள்.‌ இதனால், ஏற்படும் தனிமை உணர்வைத் தவிர்க்க பெண்கள் புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மேலும், சமூக நடவடிக்கைகளில் பங்கேற்று, தொண்டு நிறுவனங்களில் தன்னார்வலர்களாக பணியாற்றலாம்.‌

இதையும் படியுங்கள்:
தூங்குவது மட்டுமா ஓய்வு? 7 வகையான ஓய்வுகள் இருக்காம்ல?
women over 50

நிதிநிலைமை: இந்த வயதில் நிதிநிலைமை சார்ந்து சிந்திப்பது மிகவும் முக்கியம்.‌ ஓய்வு காலத்திற்குத் தேவையான நிதித் திட்டமிடலை இப்போது தொடங்க வேண்டும். இதற்காக பெண்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவுகளைக் கணக்கிட்டு ஒரு பட்ஜெட்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மேலும், முதலீடு செய்வதற்கான வழிகளைப் பற்றியும் யோசிக்கலாம். 

உடல் மாற்றங்கள்: மாதவிடாய் நின்று போதல், எடை அதிகரிப்பு, தோல் சுருக்கம் மற்றும் எலும்பு பலவீனம் போன்ற உடல் மாற்றங்கள் இந்த வயதில் ஏற்படத் தொடங்கும். இவற்றை சமாளிப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசிக்கலாம். 

எனவே, இத்தகைய மாற்றங்களை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக கட்டமைப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com