இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா!

Triphala increase insulin production
Triphala increase insulin production
Updated on

ன்றைய நாளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனக் கூறலாம். ஏனெனில், இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் சிகிச்சைக்கு உணவு கட்டுப்பட்டை தவிர, ஆயுர்வேத தீர்வுகளும் நல்ல பலன் தரும். இதனால் நீரிழிவு நோயாளிகள் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும் என்பதோடு, வேறு விதமான தீவிர நோய் பாதிப்பையும் தடுக்கலாம். இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுகையில், ‘நீரிழிவு நோய்க்கு திரிபலாவை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இதை மூன்று விதங்களில் சாப்பிடலாம்’ என்று கூறுகிறார்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திரிபலா: திரிபலா சூரணம் சித்த மருத்துவத்தில் முக்கியமான ஒரு மருந்து. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையே இது. சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தரும் திரிபலா, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமலும் தடுக்கிறது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து இருப்பதால் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. திரிபலா கணையம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது சர்க்கரையை ஜீரணிக்க உதவுகிறது.

திரிபலா சாப்பிடுவதற்கான மூன்று வழிகள்:

1. நெய்யுடன் சாப்பிடவும்: முதலில், நீங்கள் சுத்தமான நெய்யில் திரிபலாவை கலந்து சாப்பிடுங்கள். இது குடல் மற்றும் குடல்களின் சுவர்களை சுத்தப்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து அவற்றின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகி சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

2. மோரில் கலந்து குடிக்கவும்: திரிபலாவை மோரில் கலந்து குடித்தால், உடல் நலம் பெருகும். இது பாட்டி காலத்திலிருந்தே இருந்து வருகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானம் ஆரோக்கியமாக நிகழ உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் மதிய உணவுக்குப் பிறகு 1 கிளாஸ் மோர் மற்றும் 1 ஸ்பூன் திரிபலா கலந்து குடிக்க வேண்டும்.

3. திரிபலா கஷாயம் குடிக்கவும்: திரிபலா கஷாயம் அனைவருக்கும் நன்மை பயக்கும். ஆனால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு, குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். அதை எவ்வாறு தயாரிப்பது என்பதைப் பார்ப்போம்.

கஷாயம் தயாரிக்கும் முறை: இரவில் ஒரு இரும்பு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் மற்றும் திரிபலா சூரணத்தை கலக்கவும். கஷாயம் தயாரானதும், காலை வரை அப்படியே விடவும். பின்னர் அதில் தண்ணீர் மற்றும் தேன் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இதை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பொட்டாசியம் சத்து நிறைந்த 8 உணவு வகைகள்!
Triphala increase insulin production

ஒரு வயதுக்கு மேலான குழந்தைகள் முதல் அனைவரும் திரிபலா சூரணத்தை உட்கொள்ளலாம். கர்ப்பிணிகள் முறையான மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே உட்கொள்ள வேண்டும். வயதானவர்கள் அவர்களின் வயதுக்கும் தேவைக்கும் தகுந்தாற்போல் கால் தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டி வரை இதை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது தினமும் அரை தேக்கரண்டி எடுத்துக் கொள்ளலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் வைத்துக்கொண்டு இதை அளவோடுதான் சாப்பிட வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் அச்சம் இல்லை.

logo
Kalki Online
kalkionline.com