உடலுக்கு நன்மை செய்யும் நல்லெண்ணெய்!

உடலுக்கு நன்மை செய்யும் நல்லெண்ணெய்!
Published on

ல்லெண்ணெய் எள் தானியத்திலிருந்து பெறப்படும் வித்தாகும். எள் மற்றும் தேவையான சரக்குகளைப் பொடித்து பக்குவமாக ஆட்டி எடுப்பதே நல்லெண்ணெய் ஆகும். எள் நெய் என்பதே காலப்போக்கில் மருவி எண்ணெய் ஆனது. உடலுக்குப் பல்வேறு நலன்களைச் சேர்க்கும் நல்லெண்ணெய் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

இதய நோய்: மரச்செக்கு நல்லெண்ணெயில், ‘சீசேமோல்’ என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே, இதனை உணவில் அதிகம் சேர்க்கும்போது, அது இதயத்துக்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

நீரிழிவு: மரச் செக்கு நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கும்.

வலுவான எலும்புகள்: மரச் செக்கு நல்லெண்ணெயில், ‘ஜிங்க்’ என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும். எனவே, எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், மரச் செக்கு நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. நல்லெண்ணையை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

செரிமான பிரச்னை: மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய் எண்ணெயை விட, மரச் செக்கு நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும்போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்னை வராமல் இருக்கும்.

சுவாசக் கோளாறு: மரச் செக்கு நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

இரத்த அழுத்தம்: மரச்செக்கு நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் மரச் செக்கு நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

பளிச் பற்கள்: தினமும் காலையில் மரச் செக்கு நல்லெண்ணெயால் வாய் கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் கிருமிகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

புற்றுநோய்: மரச் செக்கு நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்து உள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

அழகான சருமம்: மரச் செக்கு நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் மரச் செக்கு நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

புரோட்டீன்: மரச் செக்கு நல்லெண்ணெயில் மற்ற எண்ணெய்களை விட, உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com