மார்பக புற்றுநோய் அறிகுறிகள் என்ன? எப்படி தடுக்கலாம்?

Breast cancer
Breast cancercredits to pintrest
Published on

மார்பக புற்றுநோய்கள் தற்போது பெண்களிடையே அதிகம் பரவி வருகிறது. சாதாரணமாக இருக்கும் பெண்களுக்கு திடீரென மார்பக புற்று நோய் இருப்பதாக கூறுகின்றனர். அதிலும் 30-50 வயது உடைய பெண்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது உள்ள உணவு பழக்கவழக்கங்கள் தான் இந்த புற்று நோய்க்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

மார்பகங்களில் உள்ள செல்கள் புற்றுநோய் செல்களாக மாறி இந்த நோய் உருவாகிறது. இதை ஆரம்பத்திலே கவனிக்காமல் விட்டால் புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரவிவிடும். அனைவருமே மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வோடு இருந்தால் எளிதில் அதனை வர விடாமல் தடுக்க முடியும். மார்பக புற்றுநோயின் அறிகுறிகள், மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிகளையும் இந்த பதிவில் காணலாம். 

மார்பக புற்றுநோய் அறிகுறிகள்:

  • உங்களுக்கு மார்பக புற்றுநோய் இருந்தால், உங்கள் மார்பகங்களில் நீங்கள் வலி ஏற்படுவதை உணர முடியும் மற்றும் முலைக்காம்பு வெளியேற்றம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

  • மார்பகத்தை ஒட்டிய சருமத்தில் நிறம் மாறுவது போன்ற சூழ்நிலை உங்களுக்கு இருக்கலாம். இந்நிலையில், சில சமயங்களில் மார்பகத்தின் வடிவத்திலும் நீங்கள் மாற்றம் காணலாம்.

  • மார்பகத்தின் மீது ஒரு கட்டி உருவாகி இரத்தப்போக்கும் ஏற்படலாம்.

Breast cancer
Breast cancercredits to pintrest
  • சில நேரங்களில் மார்பகத்தின் மீது சுருக்கம் அல்லது தோலழற்சி இருக்கலாம்.

  • மார்பகத்தில் கட்டி, மார்பக வடிவத்தில் மாற்றம், சருமத்தில் மங்கல் , பால் நிராகரிப்பு , முலைக்காம்பில் இருந்து வரும் திரவம், சிவப்பு அல்லது செதில் போன்ற சருமத்தின் இணைப்பு போன்ற பிரச்சனைகள் இருப்பதாக நீங்கள் அறிந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

இதையும் படியுங்கள்:
கவர்ச்சியான கண்களுக்கு, வீட்டிலே காஜல் தயாரிப்பது எப்படி?
Breast cancer

மார்பக புற்றுநோயைத் தடுப்பதற்கான சில வழிகள்?

  • மார்பக புற்றுநோயைத் தவிர்க்க, உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

  • குறைந்தது 30 நிமிடங்களாவது  உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

  • அவ்வப்போது வீட்டிலேயே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம்.

  • இதற்காக நீங்கள் அவ்வப்போது மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். (மார்பகப் பரிசோதனையின் முதல் நிலை மேமோகிராம் எனப்படும்)

  • மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். (கடல் உணவுகள், உறைந்த அல்லது பதிவு செய்யப்பட்ட மீன், ஓட்மீல், உலர்ந்த பழங்கள், முழு தானிய ரொட்டி, வறுத்த விதைகள், கொட்டைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் ஆகியவை பதப்படுத்தப்பட்ட உணவுகளின் சில எடுத்துக்காட்டுகளாகும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com