தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கும், செரிமானத்திற்கும் முதுகு வலிக்கும் உள்ள விசித்திரத் தொடர்பு!

Eating on floor
sitting on floor and eating
Published on

தரையில் அமர்ந்து சாப்பிடுவது நமது நாட்டின் பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு பின்னால் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரியுமா?

பலநூறு ஆண்டுகளாக இந்தியர்கள் தரையில் அமர்ந்தே உணவருந்துகிறார்கள். ஆனால், காலம் மாற மாற  டைனிங் டேபிள் என்ற கலாச்சாரம் வந்து சௌகரியத்திற்கு பின்னால் மக்கள் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அயல்நாடுகளின் ஆதிக்கம் பல பழக்க வழக்கங்களை இந்திய மக்களிடையே கலந்தது. அதில் ஒன்றுதான் டைனிங் டேபிள் கலாச்சாரம்.

இந்தியர்களின் பாரம்பரிமான தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கத்திற்கு பின்னால் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்துப் பார்ப்போமா?

சுகாசனம், அர்த்த பத்மாசனம்
சுகாசனம், அர்த்த பத்மாசனம்

மேசை நாற்காலிகளில் அமர்வதற்குப் பதிலாக, நம் முன்னோர்கள் சுகாசனம் அல்லது அர்த்த பத்மாசனம் போன்ற யோக நிலைகளில் தரையில் அமர்ந்து சாப்பிட்டனர். இந்த நிலைக்குப் பல நன்மைகள் உள்ளன:

1. நாம் தரையில் உட்கார்ந்து, பின்னர் உணவை எடுக்கக் குனிந்து நிமிரும்போது, நம் வயிற்றுத் தசைகள் (Abdominal Muscles) மற்றும் இடுப்புப் பகுதி மென்மையாக அழுத்தம் பெறுகின்றன. இந்தத் தொடர்ச்சியான குனிவதும் நிமிர்வதும், வயிற்றுக்குள் உள்ள செரிமான அமிலங்களின் சுரப்பைத் தூண்டி, உணவைச் செரிமானம் செய்யும் செயல்முறையை வேகப்படுத்துகிறது. இந்த நிலை, இரத்த ஓட்டத்தை செரிமான உறுப்புகளை நோக்கித் திருப்பி, செரிமானத்தின் செயல்திறனை அதிகரிக்கிறது.

2. நாற்காலியில் அமர்ந்து சாப்பிடும்போது, பெரும்பாலும் வேகமாகக் கீழே குனிந்து உண்பதால், உணவு சீக்கிரம் விழுங்கப்படுகிறது. ஆனால் தரையில் அமரும்போது ஏற்படும் அசைவுகள், உணவை நிதானமாகச் சாப்பிடவும், ஒவ்வொரு பருக்கையும் நன்கு மென்று விழுங்கவும் கட்டாயப்படுத்துகின்றன. நன்கு மென்று சாப்பிடுவது, செரிமானத்தின் முதல் படியை எளிதாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
உடற்பயிற்சி என்ற பெயரில் ‘சுய தண்டனை’ செய்யாதீங்க— தினமும் 10,000 ஸ்டெப்ஸ் ஆபத்து!
Eating on floor

முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆசனம்

நவீன வாழ்க்கை முறையில் மேசைகளில் அமரும் போது நாம் பெரும்பாலும் கூன் போட்டு உட்கார்ந்து விடுகிறோம். இது முதுகெலும்பு மற்றும் இடுப்புக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. ஆனால், தரையில் அமரும்போது:

  • சம்மணமிட்டு அல்லது சுகாசனத்தில் உட்கார்ந்தால், நம் உடல் தானாகவே நிமிர்ந்து, முதுகெலும்பு நேராகிறது. இந்த நிலை, உடலின் எடையைச் சமமாகப் பரப்பி, முதுகெலும்பில் தேவையற்ற அழுத்தத்தைத் தடுக்கிறது. இதனால், நீண்ட நேரம் உட்கார்ந்தாலும் முதுகு வலி ஏற்படுவது குறைகிறது.

  • தரையில் அமர்வதும், சம்மணமிடுவதும் இடுப்பு மூட்டுகளுக்கு நல்ல பயிற்சியை அளிக்கிறது. இது உடல் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதோடு, இடுப்புத் தசைகளைத் தளர்த்தி, மூட்டுகளில் தேவையற்ற இறுக்கம் ஏற்படுவதைத் தடுக்கிறது. இந்த நெகிழ்வுத்தன்மை, முழங்கால் மற்றும் கீழ் முதுகு வலிகள் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

குடும்பப் பிணைப்பு

ஆரோக்கிய நன்மைகள் மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகத் தரையில் வட்டமாக அமர்ந்து சாப்பிடும்போது, ஒருவருக்கு ஒருவர் இடையில் அன்பும் பிணைப்பும் அதிகரிக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, உணவை உணர்வுபூர்வமாக அனுபவிக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
பைக் ரைடரா நீங்க? இந்த 3 விஷயம் தெரியலைன்னா முதுகுத்தண்டுல ஆபத்து!
Eating on floor

ஆகவே, தாத்தா பாட்டிமார்கள் தரையில் அமர்ந்து சாப்பிட்டது, ஒரு பழக்கம் மட்டுமல்ல; அது உடலின் செரிமான மற்றும் எலும்பு அமைப்பை இயற்கையாகவே கவனித்துக்கொண்ட ஒரு பாரம்பரிய ஆரோக்கிய விழிப்புணர்வு உத்தி என்பதே அறிவியல் உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com