இந்த உண்மை தெரிஞ்சா நீங்க பிரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடவே மாட்டீங்க! 

French Fries
French Fries
Published on

பிரெஞ்சு ப்ரைஸ், அதாவது எண்ணெயில் பொறித்த உருளைக்கிழங்கை பலர் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், சமீபத்திய ஆய்வுகள் இதனை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கின்றன. குறிப்பாக, மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கும் பிரெஞ்சு ப்ரைஸ்க்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

மனநலப் பிரச்சினைகள்:

சமீபத்திய ஆய்வுகளின்படி, பிரெஞ்சு ப்ரைஸ் உட்கொள்வது கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும். ஒரு ஆய்வில், பிரெஞ்சு ப்ரைஸ் சாப்பிடுபவர்களுக்கு கவலை 12% வரையிலும், மனச்சோர்வு 7% வரையிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பொறித்த உணவுகள், அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் காரணமாக, தற்காலிகமாக ஒரு மன நிறைவைத் தரலாம். ஆனால், இந்த உணவுகளின் மீது ஏற்படும் அதீத நாட்டம் ஒருவித அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இந்த உணவு ஒரு தவிர்க்க முடியாத தேவையாக மாறும்போது, அது மன அழுத்தமாக மாறக்கூடும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் உடல் நிலையைப் பற்றி பாதங்கள் சொல்லும் உண்மைகள்!
French Fries

உடல்நலப் பிரச்சினைகள்:

பிரெஞ்சு ப்ரைஸ் போன்ற பொறித்த உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும், இவை ரத்த அழுத்தம் மற்றும் இதய ரத்தக் குழாய்களை பாதிக்கும் நோய்களுக்கும் காரணமாகின்றன. தொடர்ந்து பல வருடங்கள் அதிகமாக பொறித்த உணவுகளை உட்கொள்வது உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

அக்ரிலமைட் (Acrylamide) என்ற வேதிப்பொருள்:

தேசிய அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ள தகவலின்படி, உருளைக்கிழங்கை எண்ணெயில் பொறிக்கும்போது 'அக்ரிலமைட்' என்ற வேதிப்பொருள் உருவாகிறது. இந்த வேதிப்பொருள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அக்ரிலமைடை உட்கொள்வது மனச்சோர்வு மற்றும் கவலை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
பீட்சா (vs) பேக் செய்யப்பட்ட (Packaged Cereals) காலை உணவுகள் - எது ஆரோக்கியமானது? ஆய்வு கூறுவது என்ன?
French Fries

ஆய்வு முடிவுகள்:

ஆய்வின் முடிவில், பொறித்த உருளைக்கிழங்கை உண்பவர்கள், பொறித்த மாமிசம் உண்பவர்களை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. 12,000-க்கும் மேற்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் அதிக அளவு பொறித்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com