செல்போனை எப்போதும் பிரிய மனம் வரவில்லையா? அப்ப உங்களுக்கு நோமோபோபியா தான்!

Nomophobia
Nomophobia
Published on

- எந்த சூழலிலும் உன்னைக் கைவிட மாட்டேன்.. இது சத்தியம்.

- அடடா.. எவ்வளவு நல்லவர்..

- அட நீ வேற அவர் சொல்லிக்கிட்டு இருப்பது காதலியிடம் இல்ல. கையில் இருக்கற செல்போன் கிட்ட..

- ????

இது ஒரு ஜோக். ஆனால் சீரியசாக சிந்திக்க வேண்டிய விஷயம்..

சிறு குழந்தைக்கு சோறூட்டும்போது காண்பிப்பதில் துவங்கி பெரியவர்களின் தனிமையைப் போக்கும் தோழமை வரை உணவு உடை போன்ற அத்தியாவசியங்களில் ஒன்றாக மாறியுள்ளது செல்போன். எந்த ஒரு விஷயமும் நமது கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அதனால் பாதிப்பு இருக்காது. ஆனால் அதிலேயே அடிமையாகி விட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும். அந்த வரிசையில் தற்போது செல்போனும் இணைந்துள்ளது.

செல்போன் பயன்பாடு குறித்து இங்கிலாந்தின் ’செக்யூர் என்வாய்’ அமைப்பு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகின.

அவற்றில் 41 சதவிகிதம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர் என்றும், செல்போன் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் ஒருவருக்கு தினமும் 34 முறை வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் நோமோபோபியா எனும் உளவியல் பாதிப்பும் செல்போன் பாதுகாப்பு மீதான கவலையும் 66 சதவீதம் பேருக்கு எந்நேரமும் உள்ளது என்று குறிப்பிடுகிறது ஆய்வு.

நோமோபோபியா (Nomophobia) என்றால் என்ன? இதன் தகவல்களை இங்கு காண்போம்.

நோமோபோபியா என்பது ஒரு உளவியல் நிலை, இது மொபைல் சாதனம் இல்லாமல் இருக்கவே முடியாத நிலை அல்லது அதைப் பயன்படுத்த முடியாமல் போவதால் ஏற்படும் பயம் என வகைப்படுத்தப்படுகிறது. இது "No Mobile Phobia" என்பதன் சுருக்கமாகும்.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் மாம்பழ பூரி - தேங்காய் பால் கரி செய்யலாம் வாங்க!
Nomophobia

நோமோபோபியாவினால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஏற்படும் சில சாத்தியமான விளைவுகள் இங்கே:

நோமோபோபியா உள்ளவர்கள் தங்கள் மொபைல் சாதனத்தை பயன்படுத்த இயலாமல் அதனிடமிருந்து பிரிக்கப்படும்போது பதட்டம் அல்லது பீதியை அனுபவிக்கலாம்.

மொபைலில் தொடரும் அறிவிப்புகள், சமூக ஊடகங்கள் அல்லது தங்கள் பற்றிய ரகசிய செய்திகளை தொடர்ந்து சரிபார்க்க வேண்டிய அவசியம், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கிறது.

தொடர்ந்து திரையை உற்று நோக்குவதும் தொடர்ச்சியான அறிவிப்புகளும் தூக்க முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி தூக்கமின்மையை ஏற்படுத்தும். சிறிது நேரம் ஓய்வெடுப்பதையும் சவாலானதாக மாற்றும்.

நோமோபோபியா தரும் சமூகம் மற்றும் உணர்வு ரீதியான தாக்கங்கள்

அதிகப்படியான மொபைல் சாதன பயன்பாடு சமூகத்திலிருந்து தனிமை, மனிதருடன் நேருக்கு நேர் தொடர்புகள் குறைதல் மற்றும் உறவுகளில் விரிசல் ஏற்பட வழிவகுக்கும்.

தகவல்களின் ஓயாத தொடர்ச்சியான கவனிப்புகள் கவன இடைவெளி குறைவதற்கும் பணிகளில் கவனம் செலுத்துவதிலும் பெரும் சிரமத்தினை தரும்.

நோமோபோபியாவினால் ஏற்படும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள்

மொபைல் சாதனத்தை நீண்ட நேரம் பயன்படுத்துவது மோசமான தோற்றம், கழுத்து வலி மற்றும் முதுகு வலிக்கு வழிவகுக்கும். நீண்ட நேரம் திரைகளைப் பார்ப்பதால் கண் சோர்வு மற்றும் சோர்வைத் தரும்.

நோமோபோபியா ஏற்படாமல் சமாளிக்கும் உத்திகள்

மொபைல் சாதன பயன்பாட்டைக் குறைக்க குறிப்பிட்ட நேரங்களையும் மொபைல் அற்ற வேறு பணிகளையும் அமைக்கவும். மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் போன்ற மனநிறைவு நடைமுறைகளில் ஈடுபடுங்கள். தனிமை போன்ற அடிப்படை சிக்கல்களைத் தீர்க்க நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது மனநல நிபுணருடன் கவலைகளைப் பகிர்ந்து நேரங்களை மதிப்பு மிக்கதாக்குங்கள்.

குறிப்பாக நோமோபோபியாவின் அறிகுறிகளையோ அல்லது மொபைல் சாதன பயன்பாடு குறித்த கவலைகளையோ அனுபவித்தால் நிச்சயமாக மனநல நிபுணரின் ஆலோசனை பெறத் தயக்கம் வேண்டாம்.

நமது முன்னேற்றத்துக்கு உதவும் அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்பான செல்போனை அளவோடு பயன்படுத்தி நன்மைகளைப் பெறுவோம்.

இதையும் படியுங்கள்:
சமையலறையில் இந்த சின்னச் சின்ன டிப்ஸ் பெரும் பலன்களை அளிக்கும்!
Nomophobia

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com